பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள்

8.11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.16,294 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஜந்தன்கணக்கு மூலம் மக்களுக்கு நேரடியாக பண உதவி கிடைப்பது உறுதி செய்யபட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்கின் மூலம் ரூ.10,025 கோடி மத்தியஅரசு வழங்கியுள்ளது. குடும்ப அட்டைகளுக்கு உணவு தானியம் மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு செல்லும் ரயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ரயில் பயணத்தின்போது வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு வங்கப்பட்டுள்ளது.  12 லட்சம் பேர் இபிஎப்ஒ மூலம் பணத்தை எடுத்துள்ளனர்.

 

* கரோனா தொற்று பரிசோதனைகளுக்கான ரூ.550 கோடி கொடுத்துள்ளது. சுகாதாரத்துறைக்கு பிரதமர் ஏற்கெனவே ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி  சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாநிலங்களின் சுகாதாரத்துறை திட்டங்களுக்கு ரூ.4,113 கோடி கொடுத்துள்ளது மத்திய அரசு.

* 11.08 கோடி ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

* அத்தியவாசிய மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.3,750 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* பொது சுகாதார ஆய்கங்கள் வட்ட அளவில் அமைக்கப்படும். தொற்று நோய் தடுப்பு மையங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்படும்.

* அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்.

* மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைகள் உருவாக்கப்பட உள்ளன.

* பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

* ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

* 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை.

*  மாற்றுத் திறனாளிகளுக்கான மின்-பாடங்கள் உருவாக்கப்படும்.

* இ-பாடசசாலை திட்டத்தின் கீழ் 200 பாடப் புத்தகங்கள் சேர்க்கப்படுகிறது.

* புதிய கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

* தொடக்கக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும்.

* கல்வி தொலைக்காட்சி நாளொன்றுக்கு 4 மணி நேரம் ஒளிபரப்பப்படும்.

* ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல் கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும்.

* ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும்.

* பல்கலைக்கழங்களில் ஆன்லைன் கோர்ஸ் அறிமுகம் செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.

* மனோதர்பன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

*100 நாள் வேலை திட்டத்திற்ககாக ரூ.61,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக 40,000 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

* அதிக உற்பத்தி மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...