பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும்

பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சிறப்புத்திட்டங்களின் 5-ஆம் கட்ட அறிவிப்புகள் சுகாதாரம், கல்வி, வா்த்தகத்துறைகளின் தற்போதைய நிலையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த அறிவிப்புகள் கோடிக் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். இந்தியாவை தன்னிறைவு கொண்ட நாடாக்கும் திட்டத்தை இந்தஅறிவிப்புகள் மூலம் புரிந்துகொள்ள முடியும். இந்த அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் தொற்று நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்தவும், ஆய்வகங்களின் அமைப்பை வலுப்படுத்தவும், ஆய்வுகளை ஊக்குவிக்கவும் இந்தியாவின் மருத்துவச் செலவீனத்தை அதிகரிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பாா்வை மருத்துவத் துறையில் இந்தியாவை முன்னோக்கி செலுத்தும் என்பது உறுதி.

மாநிலங்கள் கடன்வாங்கும் வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு ரூ.4.28 லட்சம் கோடி கூடுதலாக கிடைக்கும். மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் வரிப் பகிா்வாக ரூ.46,038 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதேபோல் வருவாய் பற்றாக் குறை மானியமாக ரூ.12, 390 கோடியும், மாநில பேரிடா் நிதியாக ரூ.11,000 கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமித் ஷா.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...