விரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு

இந்தியா — ஆஸ்திரேலியா உச்சிமாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்
மோரிசனுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் நரேந்திரமோடி உரையாடினார். ‘அப்போது, நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை துவங்க, கொரோனா நெருக்கடி, வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத் திருப்பதாக, தெரிவித்தார்.

ராணுவம், வர்த்தகம், சுகாதாரம் ஆகியதுறைகளில், இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில், இருநாடுகள் இடையிலான உச்சி மாநாடு, நேற்றுநடந்தது.இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சந்தித்து, உரையாடினர்.

அப்போது, பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:இந்தியா — ஆஸ்திரேலிய உறவை, மேலும் வலுப்படுத்த, சரியான நேரத்தில், சரியானசந்தர்ப்பம் அமைந்துள்ளதாக நம்புகிறேன். இந்த உறவை, விரைவாகவும், விரிவாகவும் வலுப்படுத்துவதில், இந்தியா உறுதி கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பால், உலகம்முழுதும், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டுமுயற்சியால் மட்டுமே, இதிலிருந்து மீள முடியும். இந்தசந்தர்ப்பத்தில், மற்ற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவது அவசியமாகிறது.

நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்த்திருத்தங்களை துவங்க, இந்த கொரோனா நெருக்கடி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத் திருப்பதாகவே கருதுகிறேன். இதன் முடிவுகள், விரைவில் தெரிய வரும்.தொற்று தீவிரம்அடைந்த காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியமக்கள், குறிப்பாக மாணவர்கள் மீது, அக்கறை எடுத்துக் கொண்டதற்கு,ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி.இவ்வாறு, அவர்கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...