அவசரக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்

அவசரக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஒரேநாளில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மிக மிக அதிக எண்ணிக்கையில் தொற்றுதினமும் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக இந்தியாவில் உயர்ந்து உள்ளது என்று சுகாதாரஅமைச்சின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோவால் இது வரை 8,928 பேர் உயிரிழந்துள்ளனர். 1,46,880 பேர் நாடுமுழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கோவிட் -19 என்ற கொரோனா தொற்று நோய்க்கு எதிராக நாட்டில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார் என்று மத்தியஅரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ்தொற்றுகள் அதிகரித்து வரும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலைமை குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் விவாதித்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் என்.ஐ.டி.ஐ ஆயோக் உறுப்பினரும் மருத்துவ அவசர நிலை மேலாண்மை திட்டத்தின் கன்வீனருமான வினோத்பால் கொரோனா பாதிப்பு குறித்து விவரித்துள்ளார். மூன்றில் இரண்டுபங்கு ஐந்து மாநிலங்களில் உள்ளது எனறும் பெரிய நகரங்களில் அதிக எண்ணிக் கையிலான கொரோனா இருப்பதையும் விவரித்துள்ளார்.

அப்போது, நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மருத்துவமனை மற்றும் தனிமை படுத்தப்பட்ட படுக்கைகளின் தேவைகள் குறித்து அரசின் குழுவின் பரிந்துரைகளை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துக்கொண்டார், மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதரத் துறையுடன் கலந்தாலோசித்து அவசரகால திட்டங்களை செய்யுமாறும் சுகாதார அமைச்சக அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பருவமழை நெருங்கிவருவதால் முறையான தயாரிப்பை உறுதிசெய்யுமாறு சுகாதார அமைச்சகத்தை பிரதமர் மோடி கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். டெல்லியில் கொரோனா பரவும் நிலைமை பற்றி விவாதிக்கப் பட்டது மற்றும் இரண்டு மாதங்களுக்கான கணிப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி லெப்டினன்ட் கவர்னர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து மூத்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...