கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலுள்ள பாஜக. தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இந்தாண்டு நிறுவனநாள் மிகவும் முக்கியமானது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாவது, 75-வது சுதந்திர ஆண்டுக்கொண்டாட்டம், இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து புதியவாய்ப்புகள் வருகின்றன.
மூன்றாவதாக இந்தாண்டு நடைபெற்றதேர்தலில் மேலும் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் நமது கட்சியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 180 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளன. உலகம் முழுவதும் இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில், இந்தியாவில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசரேஷன் வழங்கப்படுகிறது. மக்கள் பசியுடன் தூங்காமல் இருப்பதற்காக மத்தியஅரசு ரூ. 3.5 லட்சம் கோடி செலவழிக்கிறது.
குடும்ப அரசியல்செய்யும் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக. மட்டுமே அதற்குமாற்றாக செயல்பட்டு வருகின்றது.
மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.
இன்று முதல் சமூகநீதி பிரசாரம் தொடங்க உள்ளது. இந்த பிரச்சாரத்தில் நீங்கள் அனைவரும் தீவிரமாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறேன். ஏழைகளுக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
ஒருதொண்டன் என்ற முறையில் கட்சி என்ன கட்டளையிடுகிறதோ, நானும் ஒரு தொண்டனாக என்னால் முடிந்ததைச் செய்வேன். உங்கள் தொண்டராக உங்களிடமிருந்தும் அதையே எதிர் பார்க்கிறேன்
பா.ஜ.,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |