இதுவரை 50 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி : பிரதமர் பெருமிதம்

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் கரோனா தடுப்பூசிதிட்டம் தொடங்கப்பட்டது. அப்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மட்டும் பயன் பாட்டில் இருந்தன.

கடந்த சிலமாதங்களாக தடுப்பூசி திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்திவருகின்றன. உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தற்போது நாள்தோறும் சராசரியாக 40 லட்சம் பேர் முதல் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘‘நாடுமுழுவதும் ஒரே நாளில் 49,55,138பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 50,10,09,609கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியிருப்பது கரோனாவுக்கு எதிரான போரில் புதிய உத்வேகம் அளிக்கிறது. அனைத்து குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 5.32 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப் பட்டிருக்கிறது. மகா ராஷ்டிராவில் 4.63 கோடி, குஜராத்தில் 3.56 கோடி, ராஜஸ்தானில் 3.46 கோடி, மத்திய பிரதேசத்தில் 3.42 கோடி, கர்நாடகாவில் 3.23 கோடி, மேற்குவங்கத்தில் 3.17 கோடி கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...