இதுவரை 50 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி : பிரதமர் பெருமிதம்

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் கரோனா தடுப்பூசிதிட்டம் தொடங்கப்பட்டது. அப்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மட்டும் பயன் பாட்டில் இருந்தன.

கடந்த சிலமாதங்களாக தடுப்பூசி திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்திவருகின்றன. உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தற்போது நாள்தோறும் சராசரியாக 40 லட்சம் பேர் முதல் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘‘நாடுமுழுவதும் ஒரே நாளில் 49,55,138பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 50,10,09,609கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியிருப்பது கரோனாவுக்கு எதிரான போரில் புதிய உத்வேகம் அளிக்கிறது. அனைத்து குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 5.32 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப் பட்டிருக்கிறது. மகா ராஷ்டிராவில் 4.63 கோடி, குஜராத்தில் 3.56 கோடி, ராஜஸ்தானில் 3.46 கோடி, மத்திய பிரதேசத்தில் 3.42 கோடி, கர்நாடகாவில் 3.23 கோடி, மேற்குவங்கத்தில் 3.17 கோடி கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...