உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள்கள் என்ன என்று கண்டறிந்து பட்டியலிட்டு அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று (6-8-2021) காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார்.

உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் அவரது உரை விவரம்:

கொரோனா நோய் பரவலை  தொடர்ந்து புதிதாக உருவான வாய்ப்புக்களை இந்தியா தனக்குசாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய பொருள்கள் புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் அத்துடன் இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும் இதன்மூலம் 400 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் ஏற்றுமதி உயர்வதற்கு நான்குஅம்சங்கள் உதவியாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார் .உள்நாட்டில் உற்பத்தி பலமடங்காக உயர்ந்திருப்பது,. உற்பத்திக்கான செலவு குறைந்திருப்பது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது, இந்தியாவின் ஏற்றுமதி முயற்சிகள், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளிநாடுகளில் தேவைகுறித்து மதிப்பிடவேண்டும் அவ்வாறு மதிப்பீடு செய்யும்பொழுது இந்திய பொருள்கள் எவற்றை அந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்க வேண்டும் அந்த பொருட்களின் பட்டியலை தயார்செய்து அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% தற்பொழுது ஏற்றுமதி செய்ய படுகிறது இந்திய பொருளாதாரம் அதன் திறன் உற்பத்தி திறன் ஆகியவற்றின் வலிமையோடு ஒப்பிடும்பொழுது ஏற்றுமதியை இன்னும் பலமடங்கு உயர்த்த இயலும்.

இந்தியா தனித்திறமை அனைத்தையும் பயன்படுத்தி புதியவாய்ப்புகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...