உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள்கள் என்ன என்று கண்டறிந்து பட்டியலிட்டு அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று (6-8-2021) காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார்.

உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் அவரது உரை விவரம்:

கொரோனா நோய் பரவலை  தொடர்ந்து புதிதாக உருவான வாய்ப்புக்களை இந்தியா தனக்குசாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய பொருள்கள் புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் அத்துடன் இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும் இதன்மூலம் 400 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் ஏற்றுமதி உயர்வதற்கு நான்குஅம்சங்கள் உதவியாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார் .உள்நாட்டில் உற்பத்தி பலமடங்காக உயர்ந்திருப்பது,. உற்பத்திக்கான செலவு குறைந்திருப்பது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது, இந்தியாவின் ஏற்றுமதி முயற்சிகள், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளிநாடுகளில் தேவைகுறித்து மதிப்பிடவேண்டும் அவ்வாறு மதிப்பீடு செய்யும்பொழுது இந்திய பொருள்கள் எவற்றை அந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்க வேண்டும் அந்த பொருட்களின் பட்டியலை தயார்செய்து அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% தற்பொழுது ஏற்றுமதி செய்ய படுகிறது இந்திய பொருளாதாரம் அதன் திறன் உற்பத்தி திறன் ஆகியவற்றின் வலிமையோடு ஒப்பிடும்பொழுது ஏற்றுமதியை இன்னும் பலமடங்கு உயர்த்த இயலும்.

இந்தியா தனித்திறமை அனைத்தையும் பயன்படுத்தி புதியவாய்ப்புகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...