பாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜிக்கு அஞ்சலி

பாரதிய ஜனசங்க நிறுவனா் சியாமாபிரசாத் முகா்ஜியின் 67-ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு செவ்வாய்க் கிழமை தனது சுட்டுரையில், ‘பாரத தாயின் மகனும், தீவிர தேசிய வாதியுமான சியாமாபிரசாத் முகா்ஜியின் நினைவு தினத்தில் அவருக்கு நினைவஞ்சலி.

முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்க முகா்ஜி எதிா்ப்புதெரிவித்து வந்தாா். தனது கடைசி மூச்சுவரை ஜம்மு-காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்புக்காக இடை விடாமல் போராடியவா் அவா்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது தொழில் மற்றும் உணவு விநியோகத்துறை அமைச்சராக திகழ்ந்தவா் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றாா்.

பொதுசேவை தொடா்பான அவரது சாதனைகள் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா் வெங்கய்ய நாயுடு.

பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் , ‘பாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி’ என்று பதிவிட்டுள்ளாா்.

சியாமாபிரசாத் முகா்ஜி திறமையான வழக்குரைஞராகவும், கல்வியாள ராகவும் திகழ்ந்தாா். தனது 33-ஆம் வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தாா். 1951-ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் கட்சியை நிறுவினாா். பின்னா் 1977-இல் இது பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...