வசம்பு என்னும் அறிய மருந்து

 சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் பொருளாகும். அதிலும் குறிப்பாக 'பச்சைப்பிள்ளைகள்' இருக்கும் வீட்டில் ஐந்தரைப் பெட்டியில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கிய மருந்துப் பொருளாகும்.

பச்சைப் பிள்ளைகள் திடீர் திடீரென்று அழும். வயிற்று வலியாக இருந்தாலும் அழும். வாயுப் பொருமலினாலும் அழும், உடனே இந்த வசம்பை ஆமணக்கெண்ணையில் முக்கிச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து வெந்நீரில் கலந்து கொடுத்தால் போதும், குணம் கிடைக்கும்.

சரியாகச் ஜீரணமாகாமல் குழந்தை வாந்தி எடுத்தாலோ, மாந்தத்தினால் வயிறு உப்பி இருந்தாலோ என்னவென்று கூற முடியாத பச்சைக் குழந்தைகள் விட்டுவிட்டு அழுதாலோ வசம்பை மருந்தாகக் கொடுத்தால் போதும். அழுகையை நிறுத்தி விடும்.

புத்தம் புதிய தேனிலும் கலந்து கொடுக்கலாம். இவ்விதம் தொடர்ந்து கொடுத்து வர விக்கல், மூச்சுத் திணறல், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை குணமாகும்.

பேதியைக் கட்டுப்படுத்தவும் வசம்பு நல்ல மருந்தாகும். குழந்தைகள் உள்ள வீட்டில் எப்போதும் வசம்பு இருக்க வேண்டும். மண்சட்டியில், வசம்பை இடித்துத் தூளாக்கி அதிலிட்டுப் போதிய அளவு நீர்விட்டு அவ்விதமே மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறி இருக்கும் காலை வேளையில் இந்த நீரை வடித்துக் கொடுக்க பேதியை நிறுத்திவிடலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கு வசம்பு நல்ல மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும். வசம்பை இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஓர் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர ஒருவாரத்தில் குணம் கிடைக்கும். எனவே, நரம்புத்தளற்ச்சியால் துன்பமடைபவர்கள் நம்பிக்கையுடன் இந்த மூலிகையைக் கையாண்டால் போதும் குணம் கிடைக்கும்.

வசம்பு, கறிமஞ்சள், ஏலரிசி இவை ஒவ்வொன்றையும் 15 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவைகள் அனைத்தையும் ஓரிரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் காலையில் அம்மியில் வைத்துப் போதிய தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.

அதன்பின்னர் இந்த விழுதை ஏறக்குறைய அரை லிட்டர் அளவு தேங்காய் எண்ணையில் கலந்து சிறு தீ எரித்துப் பக்குவமாமக் காய்ச்சி எடுக்க வேண்டும். எண்ணெய் முருகிவிடக்கூடாது.

இந்தத் தைலத்தைச் சொறி, சிரங்கு, மற்றும் படும்புண்களின் மீது கோழி இறகால் தொட்டுப் போடக் குணம் கிடைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...