வசம்பு என்னும் அறிய மருந்து

 சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் பொருளாகும். அதிலும் குறிப்பாக 'பச்சைப்பிள்ளைகள்' இருக்கும் வீட்டில் ஐந்தரைப் பெட்டியில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கிய மருந்துப் பொருளாகும்.

பச்சைப் பிள்ளைகள் திடீர் திடீரென்று அழும். வயிற்று வலியாக இருந்தாலும் அழும். வாயுப் பொருமலினாலும் அழும், உடனே இந்த வசம்பை ஆமணக்கெண்ணையில் முக்கிச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து வெந்நீரில் கலந்து கொடுத்தால் போதும், குணம் கிடைக்கும்.

சரியாகச் ஜீரணமாகாமல் குழந்தை வாந்தி எடுத்தாலோ, மாந்தத்தினால் வயிறு உப்பி இருந்தாலோ என்னவென்று கூற முடியாத பச்சைக் குழந்தைகள் விட்டுவிட்டு அழுதாலோ வசம்பை மருந்தாகக் கொடுத்தால் போதும். அழுகையை நிறுத்தி விடும்.

புத்தம் புதிய தேனிலும் கலந்து கொடுக்கலாம். இவ்விதம் தொடர்ந்து கொடுத்து வர விக்கல், மூச்சுத் திணறல், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை குணமாகும்.

பேதியைக் கட்டுப்படுத்தவும் வசம்பு நல்ல மருந்தாகும். குழந்தைகள் உள்ள வீட்டில் எப்போதும் வசம்பு இருக்க வேண்டும். மண்சட்டியில், வசம்பை இடித்துத் தூளாக்கி அதிலிட்டுப் போதிய அளவு நீர்விட்டு அவ்விதமே மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறி இருக்கும் காலை வேளையில் இந்த நீரை வடித்துக் கொடுக்க பேதியை நிறுத்திவிடலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கு வசம்பு நல்ல மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும். வசம்பை இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஓர் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர ஒருவாரத்தில் குணம் கிடைக்கும். எனவே, நரம்புத்தளற்ச்சியால் துன்பமடைபவர்கள் நம்பிக்கையுடன் இந்த மூலிகையைக் கையாண்டால் போதும் குணம் கிடைக்கும்.

வசம்பு, கறிமஞ்சள், ஏலரிசி இவை ஒவ்வொன்றையும் 15 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவைகள் அனைத்தையும் ஓரிரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் காலையில் அம்மியில் வைத்துப் போதிய தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.

அதன்பின்னர் இந்த விழுதை ஏறக்குறைய அரை லிட்டர் அளவு தேங்காய் எண்ணையில் கலந்து சிறு தீ எரித்துப் பக்குவமாமக் காய்ச்சி எடுக்க வேண்டும். எண்ணெய் முருகிவிடக்கூடாது.

இந்தத் தைலத்தைச் சொறி, சிரங்கு, மற்றும் படும்புண்களின் மீது கோழி இறகால் தொட்டுப் போடக் குணம் கிடைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...