தேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போலியானது

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் தேசப்பற்று போலியானது என்று பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோட்டில் பாஜக மாவட்ட அலுவலகத் திறப்புவிழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல்காந்தியை விமர்சித்துப் பேசியதாவது:

இந்தியா மற்றும் சீனா இடையே டோக்லாம் எல்லைப்பிரச்சினை நடந்து கொண்டிருந்த சமயத்தில் ராகுல் காந்தி இந்தியாவிற்கான சீனத் தூதரை சந்தித்தது நாட்டிற்கே தெரியும். அதிலும் அதனை வெளியே கூறாமல் ராகுல் தேசத்தை தவறாக வழிநடத்தினார். சீனத்தூதர் ராகுலுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த பிறகே அது அனைவருக்கும் தெரியவந்தது. எனவே தேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போலியானது. பாதுகாப்புத் துறை தொடர்பான 11 கூட்டங்களை நீங்கள் புறக்கணித் துள்ளீர்கள். இதுதான் ஒரு நாட்டை நடத்தும் முறையா?

இவ்வாறு பேசியவர் தேசத்தை வலுப்படுத்துவதற்காக பாஜகவில் இணையும்படி மற்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...