இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண்போக விடமாட்டோம்

இந்தியா பலவீனமான நாடு அல்ல எந்த ஒருசக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் நமது நிலத்தில் ஒரு இன்ச்கூட தொட்டுவிட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் எல்லையில் பிரச்சினை நிலவிவரக்கூடிய நிலையில், இன்று லடாக் புறப்பட்டுச் சென்றார் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே ஆகிய உயர் அதிகாரிகளும் அங்குசென்றனர்.

அங்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் மேற்பார்வைசெய்தார். இதன்பிறகு ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது: எல்லைபிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது, எந்தளவுக்கு பலன்தரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

உலகின் எந்த ஒரு சக்திமிக்க நாடாக இருந்தாலும் நமது நாட்டில் ஒரு இன்ச் இடத்தைகூட அவர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை பேச்சுவார்த்தைகளில் பலன்கிடைத்தால் அதை விட சிறந்த செய்திகிடையாது. இந்திய ராணுவ வீரர்கள் செய்த தியாகம் வீண்போக விடமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலின்போது சீன ராணுவ வீரர்கள் தாக்கியதால், 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டசம்பவம் அரங்கேறியது. சீன தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அந்தநாடு இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அமெரிக்க உளவு அமைப்புகள் தகவல்படி அந்த நாட்டில் சுமார் 35 ராணுவவீரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கம் ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் 15 மணிநேரம் நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...