பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங்

ஜம்மு – -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, முப்படை தளபதிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திரிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.கே.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ராஜ்நாத் சிங், ஜம்மு – -காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், முப்படைகளும் போருக்கு தயாராகும் நிலையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் முப்படைத் தளபதிகளிடம் கூறினார்.

இதன் பிறகு, டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “பஹல்காமில் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மட்டும் எங்கள் இலக்கு கிடையாது. திரைமறைவில் இருந்தபடி, இந்திய மண்ணில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலை செயல்படுத்த சதி செய்தவர்களும் எங்கள் இலக்கு.

”இந்த விஷயத்தில் தேவையான, பொருத்தமான, மிகச் சரியான பதிலடி விரைவில் தரப்படும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். பயங்கரவாதத்தை பூஜ்ஜியம் அளவுக்குக் கூட சகித்துக் கொள்ள முடியாது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...