புதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விகொள்கை, புதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளமாக இருக்கும்; இதை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

நம் நாட்டில், 34 ஆண்டுகளாக அமலில் உள்ள கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளைகேட்டு, பல்வேறு புதுமையான அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த கல்வி கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல்அளித்தது. ஐந்தாம் வகுப்புவரை, மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிப்பது உள்ளிட்ட சில அம்சங்கள், அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த புதிய கல்விகொள்கை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘புதிய கல்வி கொள்கையால் உயர்கல்வியில் ஏற்படும் சீர்திருத்தம்’ என்ற தலைப்பிலான மாநாடுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலை மானியகுழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்தமாநாட்டை துவக்கிவைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: புதியகல்வி கொள்கை குறித்து, நாடுமுழுதும் இருந்து பல தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்; இது வரவேற்கத்தக்க விஷயம். இதனால், நாட்டின் கல்விஅமைப்பு மேம்படும். பெரும்பாலானோர், இந்த கல்வி கொள்கையை வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், கல்வி கொள்கையில் பாகுபாடு இருப்பதாகவோ, ஒருசார்புடன் இருப்பதாகவோ, யாருமே கருத்து தெரிவிக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கல்வி கொள்கையின் முக்கிய அம்சமே, மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை, தங்கள் தாய்மொழியில் கல்வி கற்பது தான். இதன் வாயிலாக, குழந்தைகள், பாடங்களை முன்பைவிட, மிக நன்றாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இளம் வயதிலேயே பாடங்களை தெளிவாக படிப்பதன் வாயிலாக, எதிர் காலத்தில் அவர்கள் மிகஉயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும். அடுத்த கட்டமாக, இந்த கொள்கையை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தான், மிகப் பெரிய கேள்வியாக உள்ளது; இது, ஒருசவாலான விஷயமாகவே இருக்கும்.

இந்த கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தவிஷயத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் நேரடியாக இந்த கல்வி கொள்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளீர்கள். பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், புதியகல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த ஆதரவு தந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக அதை அமல்படுத்துவதற்கு, நான் முழு ஆதரவு அளிப்பேன். இந்த விஷயத்தில், நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

நம் நாட்டில் பல ஆண்டுகளாக கல்விகொள்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், புதியவற்றை கற்பதற்கான ஆர்வம், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திக்கும் தன்மை ஆகியவற்றை இழந்து விட்டோம். அதற்கு பதிலாக, ஒரு மந்தை தனத்துடன் செயல்படும் சமூகமாக மாறிவிட்டோம். புதிய விஷயங்களை சிந்திப்பதற்கான தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கல்வி கற்பதற்கான நோக்கம் இல்லாவிட்டால், இளைய சமுதாயத்தினரால், புதிய கண்டு பிடிப்புகளுக்கான திறனை வளர்த்துக் கொள்ள முடியாது. நம் நாட்டை, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு, புதிய கல்விகொள்கை மிகவும் முக்கியம். நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல, சீர்திருத்தமே சரியான வழி. அதற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர் .புதிய இந்தியாவை அமைப்பதற்கான அடித்தளமாக புதிய கல்வி கொள்கை இருக்கும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்கவேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.

எப்படி சிந்திக்க வேண்டும்?

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று நடந்த மாநாட்டில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் மேலும் பேசியதாவது:கல்வி கொள்கையில் மாற்றங்கள் தேவை என்பதை, தற்போதைய மாறிவரும் உலக நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. கல்வியை பொறுத்தவரை, ‘என்ன சிந்திக்க வேண்டும்’ என்பதற்கு தான், இதுவரை முக்கியத்துவம் அளித்து வந்தோம். ஆனால், புதிய கல்வி கொள்கையில், ‘எப்படி சிந்திக்க வேண்டும்’ என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது, ‘டிஜிட்டல்’ யுகம். மாறிவரும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும், வாய்ப்புகளை எளிதாக அடையும் திறமை மிக்கவர்களாகவும் மாற்றுவதை, புதியகல்வி கொள்கை உறுதி செய்கிறது. தனி நபர்கள், பல ஆண்டுகளாக, வாழ்க்கைமுழுதும் ஒரு தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றவேண்டும். அதற்கு ஏற்ப, ஒவ்வொரு தனி நபரின் திறமையையும் மேம்படுத்து வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

‘திறமையுடன் கூடிய, மனித நேயமிக்க உள்ள சமுதாயத்தை உருவாக்குவதே, கல்வி கொள்கையின் நோக்கமாக இருக்கவேண்டும்’ என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார்.நம்நாட்டுக்கு மிகச்சிறந்த மாணவர்கள், தொழில் நிபுணர்கள், மனிதநேய மிக்கவர்களை உருவாக்கி தருவதே, புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சம். இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...