இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-

கடந்த மே மாதம் முதல் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை நீடித்துவருகிறது. பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், பிரச்சினையை தீர்க்க சீனா ஒத்துழைப்பதில்லை.

இந்நிலையில், எல்லைப்பிரச்சினையை தீர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றதயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதையை கடைப் பிடிப்பதுதான் சரியானவழி என்று சீனா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியாவின் 74ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரையில், “பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லைவரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையில் குறிவைப்போருக்கு, அவர்களுக்கு புரியும் மொழியிலேயே நமதுபாதுகாப்பு படையினர் பதில் அளித்துள்ளனர்.

இந்தியாவின் ஒருமைப்பாடே நமக்கு உச்சபட்சமாக முக்கியம். நம்மால் என்ன செய்யமுடியும், நமது ராணுவ வீரர்களால் என்ன செய்யமுடியும் என்பதை லடாக்கில் அனைவருமே பார்த்து விட்டனர்” என்று தெரிவித்தார். ஜூன் 15ஆம் தேதியன்று லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினர் மோதிக்கொண்டதில் 20 இந்தியவீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷோலிஜியான் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிரதமர் மோடியின் உரையை நாங்கள் கவனித்தோம். நாம் இருவருமே நெருக்கமான அண்டைநாடுகள். நீண்டகால நலன் அடிப்படையில் இருநாடுகளுமே பரஸ்பர மரியாதையையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி.

நமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும், நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்ட கால அடிப்படையில் இருதரப்பு உறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...