ஸ்ரீசைலம் நீர்மின் நிலைய தீவிபத்து: பிரதமர் மோடி வருத்தம்

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திரமோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் உள்ள நான்காவது யூனிட்டில் நேற்றிரவு (வியாழக்கிழமை) 11 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துசிதறியது.

விபத்து நடந்த போது நான்காவது யூனிட்டில் 19 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அவர்களில் 10 பேர் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி தப்பினார். அதில் 6 பேர் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 9 பேரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்திலிருந்து பாதுகாப்புஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிக்கிக்கொண்ட 9 பேரையும் தேடிக்கண்டு பிடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே ஸ்ரீசைலம் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்து எதிர்பாராதது. விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடுதிரும்புவார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...