சீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா

இந்தியா சீனா இடையே மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டு வரும் நிலையில் ரஷ்யா இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களை யும் அழைத்து மாஸ்கோவில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட வைத்து மத்தியஸ்தம் செய்து வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரா ஜ்நாத் சிங் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீபெங்கை நேற்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு சீனாவின் வேண்டுகோளின் படி ரஷ்யா முன்னிலை யில் நடைபெற்று உள்ளது.

பாருங்கள் நம்முடைய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் சீன பாதுகாப்பு அமைச்சர் வீபெங்கை எப்படி ஆளுமையுடன் கையாளுகிறார் என்று பாருங்கள். ஒருகாலத்தில் இந்திய பாராளுமன்றத்திலேயே காங்கிரஸ் கோமாளி பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி சீனாவை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது சீனா இந்தியா வை விட வலிமையானது என்று எல்லையில் சீனா செய்வதை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இல்லை என்றார்.

ஆனால் இப்பொழுதோ சீனாவின் அண்ணனான ரஷ்யாவில் வைத்து அடிக்கு அடி உதைக்கு உதைஎன்று சீனாவுக்கு பாடம் எடுக்கும் மோடியின் பாதுகாப்பு அமைச்சரை பாருங்கள்..

நேற்று முன் தினம் தான் இந்தியா ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இந்திய அமெரிக்க ராணுவ ஸ்டிரேடஜிக் ஒத்துழைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் சீனா பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் ஒரே சமயத்தில் இந்தியாவை தாக்க நினைத்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் நிலையில் இந்திய ரா ணுவம் இருப்பதாக கூறி இருந்தார்.

பிபின் ராவத் சீனா பாகிஸ்தான் இரண் டு நாடுகளும் ஒரே சமயத்தில் தாக்கி ஆனாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அமெரிக்கா இணைந்த ஸ்டிரேடஜிக் ஒத்துழைப்பு கூட்டத்தில் கூறிய மறு நாளே சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்க் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை முதல் முறையாக சந்தித்து பேசி இருக்கிறார்.

வழக்கமா அமெரிக்காவுடன் கை கோர்க்கும் நாடுகளை ரஷ்யா கண்டு கொள்ளாது.ரஷ்யாவுக்கு தோள் கொடுக்கும் நாடுகளை அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் லிஸ்டில் இருந்து தூக்கி எறிந்து விடும்.

ஆனால் அமெரிக்கா ரஷ்யா வரலாற்றில் இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து வா ங்க பிரதர் என்று இணங்கி தோள் கொடு த்து நிற்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. அதுவும் மோடியால் மட்டுமே இந்த அதி சயம் நடைபெற்றுள்ளது.

கம்யூனிசமும் முதலாளித்துவமும் காதல்கொண்டு இது வரை இருந்தது இல்லை ஆனால் மோடியால் அது உருவாகிக்கொண்டு வருகிறது.நேருவுக்கு இருந்த கம்யூ னிச காதலினால் தான் இந்தியா சோவி யத் யூனியனுக்கு சொம்பு தூக்கி கொ ண்டு இருந்தது.

சொம்பு மட்டுமல்ல இந்தியா தன்னுடைய சொத்துக்களை பல வற்றை சோவியத் யூனியனின் நட்புக்காக இழந்துள்ளது. இருந்தாலும் 1962 இந்திய சீனப்போரில.சோவியத் யூனியன் இந்தியாவை கழற் றி விட்டு சீனாவுக்கு ஆதரவாக நின்றது.

இந்தியாவை சோவியத் யூனியன் கழ ற்றி விட்டவுடன் அது வரை இந்தியா,,,வு க்கு எதிராக இருந்த அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பியது. அப்போதைய அமெரிக்க அதிபர் கெ ன்னடி செய்த உதவியால் தான் இந்தியா சீனாவிடம் இருந்து தப்பியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளவில் நாடுகளிடையே நடைபெற்ற பல போர்களிலும்பல நாடுகளில் நடைபெற்று வரும் உள் நாட்டு போர்களிலும் அமெரி க்காவும் ரஷ்யாவும் எதிர் எதிராக நின்று போரை தூண்டி விட்டு வந்துள்ள வரலாறே இருந்து வருகிறது.

அந்த வரலாற்றை மோடி மாற்றி எழுதிவருகிறார். மோடி எத்தனையோ வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறார். அதில் இப்பொழுது இந்தியாவுக்கு இணக்கமாக நின்று அமெரிக்கா ரஷ்யா இரண்டையும் தோள் கொடுக்க வைத்த வரலாறு இருக்கிறது அல்லவா..

அது இனி இந்திய வரலாற்றில் மட்டும ல்ல அமெரிக்க ரஷ்யா வரலாற்றில் கூட
அவர்கள் இணைந்து இருந்த ஒரே விச யம் இந்தியா .இணைத்த தலைவர் மோடி என்றே எழுதப்பட்டு இருக்கும்.

இதுக்கெல்லாம் மூளை வேண்டும்ப்பா காங்கிரஸ் கூமுட்டைகளே.. ரஷ்யாகாரனிடம்  ஆயுதம் கேட்டு லட்சக்கணக்கான கோடிகளை அள்ளிக்கொடுத்தால் போதுமா? ரஷ்யா இந்தியா அள்ளிக்கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு ஆயுதம் அளித்து விட்டு சீனாவுக்கு ஆதரவாக
தான் நின்றது.

ஆனால் மோடி ரஷ்யாவுக்கு பிசினஸ் கொடுத்து இருக்கிறார். அதுவும் எங்கு தெரியுமா? இந்தியாவில் தான். உக்ரை ன் நாட்டில் இருந்த கிரிமியாவை ரஷ்யா 2014 ல் ஆட்டையப்போட்டதால் அமெரி க்கா ஐரோ ப்பிய நாடுகள் ரஷ்யாஙுடன் நோ பிசினஸ் என்று பொருளாதார த டைகள் விதிக்க ரஷ்யா சோத்துக்கே சிங்கி அடிக்க ஆரம்பித்தது.

ஆனால் மோடி மட்டும் துணிந்து நின்று இந்தியாவுக்கு வாங்க புதின் நாங்கள் உங்களுக்கு சோறு போடுகிறோம் என்றார். 2016 அக்டோபரில் இந்தியாவுக்கு வந்த புதினுக்கு நஷ்டத்தில் இருந்த தனி யார் ஆயில் நிறுவனமான எஸ்ஸார் நிறு வனத்தை கொடுத்து பிழைத்து கொள்ளுங்கப்பா என்று பிசினஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார்.

புதினும் ரஷ்யாவின் அரசு பெட்ரோல் நிறுவனமான ரோஸ் நெப்ட்டின் பெட்ரோலை இந்தியாவில் புதிது புதிதாக உருவாகி கொண்டு இருக்கும் எஸ்ஸார் பெட்ரோல் பங்குகளின் மூலமாக இந்திய
வண்டிகளில் ஊற்றி அதன் மூலமாககிடைக்கும் வருவாயில் ரஷ்யர்களுக்கு சோறு போட்டு வருகிறார்.

கிரிமியா விசயத்தினால் ரஷ்யாவில் ஏற் பட்ட பொருளாதார நெருக்கடி தீர மோடியுடன் புதின் போட்ட பெட்ரோல் டீலிங் தான் முக்கியமான காரணம் என்பதால் ரஷ்யர்களுக்கு புதின் மீது மதிப்பு கூடிவிட்டது. இதனால் 2024 தேர்தலுக்கு பிற கும் ரஷ்யாவின் அதிபராக 2036 வரை
புதினே இருக்க வாய்ப்புகள் உள்ளது.

இப்படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதார தடையை கண்டு கொள்ளாது உலகி ன் 2 வது கச்சா எண்ணெய் உற்பத்தியா ளரான ரஷ்யாவுக்கு இந்தியாவில் பெ ட்ரோல் சப்ளை செய்ய வைத்த மோடியை எதிர்த்து ரஷ்யா சீனாவுக்கு ஆதரவாக
நிற்குமா?

நிச்சயமாக முடியாது.ஏனென்றால் இனி ரஷ்யாவின் பொருளாதாரம் இந்தியாவை சார்ந்தே இருக்க முடியும். இந்தியா நல்லா இருந்தால் தான் ரஷ்யா நல்லா இருக்க முடியும்.சீனாவினால் இந்தியா
வுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்பட போவது ரஷ்யாவும் தான்.

இதனால் தான் ரஷ்யா சீனாவை கூப்பி ட்டு இந்தியாவுடன் மோதல் வேண்டாம் என்று அட்வைஸ் செய்து கொண்டு இரு க்கிறது.மீறினால் நமக்கு இடையே பஞ்சாயத்து உண்டாகி விடும் ஜாக்கிரதை என்று ரஷ்யா சீனாவுக்கு பாடம் எடுத்துவருகிறது.

ஜிடிபி பற்றி பேசும் காங்கிரஸ் கோமாளி களே ..ஜிடிபியை விட பண வீக்கம் தான் சாதாரண மக்களையும் பாதிக்கும் மிக பெரிய பொருளாதார பிரச்சனை. நாடு நல்லா இருந்த காலத்திலேயே 12 சதவீதத்திற்கு மேல் பண வீக்கத்தை உயர வைத்தது காங்கிரஸ் அரசு.

விலைவாசியை உயரவிட்டு பண வீக்க த்தை கட்டுப்படுத்த என்ன வழி என்றே தெரிய வில்லை என்று பாராளுமன்ற த்தில் ஒப்பாரிவைத்த பொருளாதார புலி சிதம்பரம்இப்பொழுது பிஜேபி அரசுக்கு பொருளாதார பாடம் எடுப்பது தான் கா மெடியாக இருக்கிறது.

கொரானாவினால் நாட்டின் அனைத்து உற்பத்திதுறைகளும் முடங்கி இருக்கும் பொழுது விலைவாசியை உயர விடாமல் பண வீக்கம் 7 சதவீதத்தை எட்டாமலேயே இருக்கிறது. சராசரி மனிதனின் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனை ஜிடிபி அல்ல பணவீக்கம் தான்.

கடந்த 6 மாதங்களாக எந்த வித வருமான மும் இன்றி நாடே முடங்கி இருந்த நிலையிலும் பசி பட்டினி இன்றி மக்களை வாழ வைத்ததோடு நில்லாமல் உலகின் 2 வது வல்லரசு என்று சொல்லப்பட்ட ரஷ்யாவையும் வாழ வைத்து வரும் மோடி அர சை பற்றி பேச அரை வேக்காடுகளுக்கு என்ன தகுதி இருக்கிறது.

இந்த அசாதாரண நிலையிலும் எல்லை யில் வம்புக்கு நிற்கும் சீனாவுக்கு பயந்து ஓடிவிடாமல் வா ..நீ மட்டும் அல்ல உன் நண்பன் பாகிஸ்தானையும் கூட்டி வா மோதி பார்த்து விடுவோம் என்று மார் தட்டி நிற்கும் மோடி அரசை பார்த்து குறை கூறுபவர்கள் நிச்சயமாக முட்டாள்களாகவே இருக்க முடியும்.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...