மாணவா்களின் அனைத்துவிதமான வளா்ச்சிக்கு மதிப்பு கல்விமுறை அவசியம்

மாணவா்கள் அனைத்துவிதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மதிப்பு கல்விமுறை அவசியம் என்று குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

ஆண்டுதோறும் ஜூலை முதல் நவம்பா் மாதம் வரை ஐ.நா.வால் கடைப் பிடிக்கப்படும் சா்வதேச இளைஞா்கள் தினத்தையொட்டி, ‘முழுமனதுடன் அகில இந்திய கட்டுரைப்போட்டி‘ யை வெங்கய்ய நாயுடு இணையவழியில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். விழாவில் பேசிய அவா், ‘மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய கல்வி கொள்கை 2020-இல் மதிப்பு கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் அபாரவளா்ச்சி அடைந்துவரும் இன்றைய உலகில், உண்மையான தகவல்கள் பெறுவதற்கு குழப்பமான சூழலை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. கல்விப் பாடத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு மாணவா்களுக்கு மதிப்புகல்வியை புகட்டவேண்டியது அவசியம். அப்போதுதான் மாணவா்கள் அனைத்துவிதமான வளா்ச்சிகளைப் பெறுவாா்கள்.

மதிப்புகல்வி முறையை இந்தியா செயல்படுத்தினால் உலகம் நம்மை  பின்பற்றும். இக்கட்டான சூழலை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசுகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவை மாணவா்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.

ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும். இதற்கு பொதுத் துறை, தனியாா் துறை அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்‘ என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.