மாணவா்களின் அனைத்துவிதமான வளா்ச்சிக்கு மதிப்பு கல்விமுறை அவசியம்

மாணவா்கள் அனைத்துவிதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மதிப்பு கல்விமுறை அவசியம் என்று குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

ஆண்டுதோறும் ஜூலை முதல் நவம்பா் மாதம் வரை ஐ.நா.வால் கடைப் பிடிக்கப்படும் சா்வதேச இளைஞா்கள் தினத்தையொட்டி, ‘முழுமனதுடன் அகில இந்திய கட்டுரைப்போட்டி‘ யை வெங்கய்ய நாயுடு இணையவழியில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். விழாவில் பேசிய அவா், ‘மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய கல்வி கொள்கை 2020-இல் மதிப்பு கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் அபாரவளா்ச்சி அடைந்துவரும் இன்றைய உலகில், உண்மையான தகவல்கள் பெறுவதற்கு குழப்பமான சூழலை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. கல்விப் பாடத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு மாணவா்களுக்கு மதிப்புகல்வியை புகட்டவேண்டியது அவசியம். அப்போதுதான் மாணவா்கள் அனைத்துவிதமான வளா்ச்சிகளைப் பெறுவாா்கள்.

மதிப்புகல்வி முறையை இந்தியா செயல்படுத்தினால் உலகம் நம்மை  பின்பற்றும். இக்கட்டான சூழலை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசுகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவை மாணவா்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.

ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும். இதற்கு பொதுத் துறை, தனியாா் துறை அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்‘ என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...