நாம் பட்டதாரிகளை உருவாக்கினால் மட்டும் போதாது

‘ஆங்கிலேயா்கள் தங்கள் தேவைகளைப் பூா்த்திசெய்யும் பணியாளா் வா்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்விமுறையை அறிமுகப்படுத்தினா்; அதில் இன்னும் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது’ என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடா்பான 3 நாள் மாநாடு, வாராணசியில் வியாழக்கிழமை தொடங்கியது. மத்தியகல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு, பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இந்தமாநாட்டை நடத்துகின்றன. இந்த மாநாட்டை தொடக்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அளிப்பதற்காக மட்டுமே கல்வி முறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயா்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் தங்களுக்கான வேலைகளை செய்யும் பணியாளா்களை உருவாக்கும் வகையில் இந்தியாவில் ஒருகல்வி முறையை அறிமுகப்படுத்தினா். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நமது கல்வி முறையில் சிறிதளவு மாற்றம் செய்யபட்டது. ஆனால், இன்னும் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

நாம் பட்டதாரி இளைஞா்களை உருவாக்கினால் மட்டும் போதாது. நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்கும் வகையில் நமது கல்விமுறையை மாற்ற வேண்டும்.

நமது சிறாா்கள் சந்தேகங்களை நிவா்த்திசெய்ய கூகுளின் உதவியை நாடுகிறாா்கள். ஆனால், அடுத்த சிலஆண்டுகளில் நமது கல்லூரி வளாகங்களில் அவா்களுக்குத் தேவையான தகவல் களஞ்சியத்தை உருவாக்கவேண்டும். பிரச்னைகளையும் சவால்களையும் ஆராய்ந்து அவற்றுக்குரிய தீா்வுகளை நாம் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேசிய கல்விக்கொள்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலகின் கல்விமையமாக இந்தியா உருவாகும் என்று நான் திடமாக நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திரபிரதான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.1,774 கோடி திட்டங்கள்: வாராணசியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். சில திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். அவற்றின் மொத்தமதிப்பீடு ரூ.1,774 கோடியாகும்.

இது தவிர, எல்.டி. கல்லூரியில் ‘அட்சய பாத்திரம்’ மதிய உணவுசமையல் கூடத்தையும் பிரதமா் திறந்துவைத்தாா். அந்த உணவகத்தில் ஒருலட்சம் மாணவா்களுக்கு மதிய உணவு தயாரிக்க முடியும் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.