மூலிகை தாவரங்கள் சாகுபடியை ஊக்குவிக்க முக்கிய ஆயுஷ் மற்றும் மூலிகைதொழில் அமைப்புகளுடன், ஆயுஷ் அமைச்சகம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
ஏடிஎம்எம் (ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர் சங்கம்), மும்பை, ஏஎம்ஏஎம் (ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தியாளர் சங்கம்), புதுதில்லி, ஏஎம்எம்ஓஐ( இந்திய ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்கள் அமைப்பு) திருச்சூர், எஎச்என்எம்ஐ(இந்திய மூலிகை மற்றும் ஊட்டச் சத்து தயாரிப்பாளர் சங்கம்), மும்பை; எப்ஐசிசிஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு) , தில்லி மற்றும் சிஐஐ, தில்லி ஆகிய அமைப்புகளுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டது.
ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது. தொழில் துறையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆயுஷ் அமைச்சகம் வழங்கும் என்றும், அனைவரும் ஒருங்கிணைந்த குழுவாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் ராஜேஷ் கொடேச்சா கூறினார்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |