`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்

இரண்டு நாள்களாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புல்வாமா தாக்குதல்குறித்தும், அபிநந்தன் விடுதலை குறித்தும் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. இன்று புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.

கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமாபகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத்தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட்பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து பிப்ரவரி 27-ம் தேதி, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறிநுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானபடையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழேவிழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அபிநந்தனை விடுவிக்குமாறு பல்வேறு உலகநாடுகள் அழுத்தம் கொடுத்தநிலையில், மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்ட அபிநந்தன், அட்டாரி – வாகா எல்லைவழியாக இந்தியா திரும்பினார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) கட்சி எம்.பி அயாஸ் சாதிக், “கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது, பாகிஸ்தானில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இம்ரான்கான் கலந்துகொள்ள மறுத்த அந்த கூட்டத்தில் பி.பி.பி., பி.எம்.எல் கட்சியின் தலைவர்கள், ராணுவத்தலைமை ஜெனரல் ஜாவேத் பஜ்வா ஆகியோர் கலந்துகொண்டு இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க பரிந்துரைசெய்தோம். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, `ஒருவேளை பாகிஸ்தான், விங்கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிக்கா விட்டால், இன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது போர்தொடுக்கும்’ என்று கூறினார்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவத் தலைமை ஜெனரல் கமர்ஜாவேத் பஜ்வாவின் கால்கள் நடுங்கின’’ என்று நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தெரிவித்தகருத்து மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் செளத்ரி, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடித்தொடர்பு இருப்பதாக ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், `புல்வாமா தாக்குதல் இம்ரான்கான் அரசின் பெரும் சாதனை’ என்று குறிப்பிட்டார். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே இந்தியாவின் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என ஒப்புதல் அளித்திருக்கும் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

One response to “`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...