அத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்

அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கர மூர்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி 1927ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரிக்கப்படாத இந்தியாவில் கராச்சியில்பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்குவந்தது.

அத்வானி நேற்று தன் 93-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். இதில் பிரதமர் மோடி அத்வானியின் இல்லத்துக்கு நேரில்சென்று வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானியை அவரது இல்லத்திற்குசென்று வாழ்த்தினர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தொண்டர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் அத்வானி ‘வாழும் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்க கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் டி.எச்.சங்கரமூர்த்தி கூறியதாவது:

“உங்களுக்குத்தெரியும். லால் கிருஷ்ணா அத்வானி கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர். ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதாகட்சி ஆகியவற்றின் மூலம் தாய் நாட்டுக்காக அவர் செய்தசேவை, தியாகம் மற்றும் பங்களிப்பு ஒருதனித்துவமான விஷயம்.

அவரது தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையில் கறைபடியாமலும் நேர்மையாகவும், மிகவும் நம்பகத் தன்மை கொண்ட ஒரு தலைவராகவும் விளங்குகிறார். ஒரு தலைவராக தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஏராளமான அறிவும் அனுபவமும் கொண்டவர். நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளக் கூடிய அத்தகைய ஓர் உயர்ந்தமனிதராக அத்வானி திகழ்கிறார்.

அத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களின் தீவிர விருப்பமாகும். அவர் எல்லா வகையிலும் சிறந்தவர், சரியானவர், புகழ்பெற்றவர். கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, அத்வானிக்கு பாரதரத்னா விருதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு டி.எச்.சங்கர மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...