பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளில் ஒன்றான Gcon விருது

நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருது பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருது இதுவாகும். மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா சென்றடைந்துள்ள நிலையில், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு முதலில் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவிற்கு சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபு உடன், இந்தியா-நைஜீரியா இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, “G20” மாநாட்டில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு “G20” மாநாட்டை நடத்திய நாடு என்ற முறையில், இந்தியாவிற்கு “டிரோய்கா” உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “G20” மாநாட்டை முடித்துவிட்டு, புதன்கிழமை கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்ஃபான் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...