நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருது பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருது இதுவாகும். மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா சென்றடைந்துள்ள நிலையில், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு முதலில் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவிற்கு சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபு உடன், இந்தியா-நைஜீரியா இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, “G20” மாநாட்டில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு “G20” மாநாட்டை நடத்திய நாடு என்ற முறையில், இந்தியாவிற்கு “டிரோய்கா” உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |