கொரோனா தடுப்பூசி வழங்கிய மோடிக்கு உயரிய விருது

கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகா நாட்டுக்கு தடுப்பூசி வழங்கி உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க தீவு நாடான டொமினிகாவின் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்தியா – டொமினிகா நல்லுறவை வலுப்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகவும், நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது, இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் டொமினிகாவிற்கு இந்தியா அளித்து வரும் ஆதரவையும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவரது பங்கையும் இந்த விருது அங்கீகரிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான கயானாவில், வரும் 19 – 21 வரை நடக்கும் இந்தியா – கரீபிய சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அங்கு செல்கிறார். அப்போது, டொமினிகா அதிபர் சில்வானி பர்டன், பிரதமர் மோடிக்கு விருது அளித்து கவுரவிப்பார் என கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏற்கனவே இந்த விருதை பெற்றுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...