மனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை வளர்க்க வேண்டும்.

“பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்கவேண்டும்,

டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிக பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்துதொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும். இன்றைய அறிவுசார் சமுதாயத்தில், தகவல் முக்கியவிஷயமாக உள்ளது. தகவல்களை விரைவாக அணுகக் கூடியவரே பயன் அடைவர். அதுபோன்ற தகவலை பெறுவதற்கு டிஜிட்டல் மயம்தான் ஒரேவழி.

கொவிட்-19 பெருந்தொற்று பள்ளிகளை மூடவைத்து கோடிக்கணக்கான மாணவர்களை வகுப்பறையைவிட்டு வெளியேற்றிவிட்டது. இந்த சவாலுக்கு ஆன்லைன் கல்விமூலம் தீர்வுகாண உலக சமுதாயம் முயற்சிக்கிறது.

கற்பித்தலையும், கற்றலையும் மாற்றுவதற்கான வாய்ப்பை தொழில் நுட்பம் வழங்குகிறது. தொழில்நுட்பம் வேகமாக மாறுவதால், புதியயுகத்தின் தேவைக்கேற்ப கல்வி முறைகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டியதேவை ஏற்பட்டுள்ளது.

தொலைதூர பகுதிகளிக்கும் தரமானகல்வி, குறைந்த செலவில் கிடைக்க ஆன்லைன் கல்வி உதவுகிறது. இது தனிப்பட்டகற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஆன்லைன் கல்வி, கல்வி நிறுவனங்களுக்கு செல்லமுடியாத இல்லத்தரசிகள் மற்றும் பணியாளர்களுக்கும் உதவியாக உள்ளது. கொவிட்தொற்றுக்குப் பின்பும், ஆன்லைன் கல்வி விருப்பத் தேர்வாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. கொவிட்-19 தொற்று கல்விஅமைப்பை மாற்றிவிட்டது என்பதில் எந்தசந்தேகமும் இல்லை.

கொவிட்-19 தொற்றுக்கு முன்பே கல்வியில் தொழில்நுட்ப வேகம் எடுக்கத் தொடங்கியது. உலகளாவிய கல்வி தொழில்நுட்பத்துறை கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துவருகிறது. இது கல்வி கற்பவர்களுக்கு மட்டும் அல்ல, கல்விதொழில் முனைவோர்களுக்கும் மிக பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இத்துறை வழங்கும் திறன்களை பெற்று, புதுமைகள்படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

நெருக்கடி காலங்களில், சமூக-பொருளாதார நடைமுறையை எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதை கொவிட்-19 தொற்று நம்மை அறியவைத்துள்ளது. டிஜிட்டல் வழியில் வாழ, எவ்வளவு பேர் தயாராக உள்ளனர் என்ற கேள்வியை இந்தகொவிட் அனுபவம் எழுப்பியுள்ளது. இதற்கு தேவையான கட்டமைப்பு விஷயங்கள், கணினிகள், திறன்பேசிகள் போன்ற உபகரணங்கள், வேகமான இணைய இணைப்பு போன்ற விஷயங்களுக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர்-மாணவர்கள் இடையே நல்ல கலந்துரையாடலை ஏற்படுத்தலாம். ஆனால், அது வகுப்பறையில் கிடைக்கும் தொடர்புக்கு ஈடாகாது. ஆன்லைன் கல்வி, போதியளவு தீவிரமாக இல்லை என பெற்றோர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கொவிட்-19 தொற்றுகாரணமாக அவசரத்தில் ஆன்லைன் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதால், இந்தகருத்து ஏற்பட்டிருக்கலாம்.

வகுப்பறையில் நடத்தப்படம் நேரடிபாடம், விளையாட்டு, உடற்பயிற்சி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியமான விஷயங்கள். இவற்றை ஆன்லைன் கல்வியால் அளித்துவிடமுடியாது.

மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆன்லைன் மற்றும் வகுப்பறை கல்வி இணைந்தகல்வி மாதிரியை உருவாக்க வேண்டும். பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் கல்விக்கு முடிவுகட்டி, மாணவர்களிடையே விவேக சிந்தனை, கற்பனை, புதுமையை வளர்க்கவேண்டும்.

ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடியில் ஆதி சங்கரா டிஜிட்டல் அகாடமியை’ காணொலி காட்சி மூலம்  இன்று தொடங்கி வைத்து. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...