விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணைஅமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் 2020 டிசம்பர் 1 அன்று உரையாடினார்.

வேளாண் சீர்திருத்த சட்டங்களின் பலன்கள்குறித்து விவசாய சங்கங்களுக்கு  அமைச்சர்கள் மீண்டும் விளக்கினார்கள். வேளாண் சீர்திருத்த சட்டங்கள் குறித்த பல்வேறு விஷயங்கள்குறித்து சுமூகமான சூழ்நிலையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை அன்புடன்வரவேற்ற வேளாண் அமைச்சர்,  விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளதென்றும், பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.

வேளாண்துறையின் வளர்ச்சி எப்போதுமே இந்திய அரசின் முக்கிய முன்னுரிமையாக இருந்திருக்கிறது என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக அரசோடு இன்னொரு கட்டபேச்சுவார்த்தையில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...