கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி

விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் அரசாக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நெல்லியில், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியின் 17-வது தவணையை விடுவிக்கும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் (ஸ்பிரேயர்), நேரடி நெல் விதைப்பு இயந்திரங்கள், தேனி வளர்ப்பு பெட்டிகள் ஆகிய வற்றையும் அமைச்சர் எல் முருகன் வழங்கினார். மேலும் விவசாய துணை விரிவாக்க பெண் பணியாளர்களுக்கான (வேளாண் தோழி) சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகள் அமைத்திருந்த இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின்பு நடைபெறும் முதல் நிகழ்ச்சி விவசாயிகளின் மேம்பாட்டுக்கானது என்றார். இன்று பிரதமர் விடுவித்துள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, நாட்டிலுள்ள 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை நேரடியாக சென்றடையும்  என்றும், இந்த நிதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அவர்கள் விவசாய இடுபொருட்களுக்காக கடன் வாங்குவதை குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார். மத்திய அரசு நாட்டில் உள்ள நான்கு பிரிவினர் குறிப்பாக மகளிர், விவசாயிகள், இளைஞர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தரம் உயர்த்தி விற்பதன் மூலம் அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் மூலம் நாட்டில் மூன்று லட்சம் பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக பயிற்சியளித்து விவசாய பணிகளில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை இயக்குபவர்களாக உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். மேலும் நியாயவிலை கடைகளில் சிறு தானியங்களை விற்க தகுந்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் சிறுதானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சி பாஸ்கர பாண்டியன்,  திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி வி சுரேஷ், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் எஸ் ரமேஷ் மற்றும் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய் நீஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலு ...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை பற்றி மோடி  விளக்கம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, விரிவானதாக ...

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தல ...

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை மாண்புமிகு உறுப்பினர்களே, 1.18-வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ...

மாநிலங்களவை 264-வது அமர்வையொட்டி ...

மாநிலங்களவை 264-வது அமர்வையொட்டி ஜெக்தீப் தன்கர் ஆற்றிய உரை மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 264-வது அமர்வு தொடங்குவதையொட்டி, உங்கள் ...

உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ- வ ...

உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ- விளையாட்டு வீரர்கள் அதிருப்தி அமைச்சர் உதயநிதி வெளியிட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய 'லோகோ' ...

செங்கோல் நேர்மையான ஆட்சியின் அ ...

செங்கோல் நேர்மையான ஆட்சியின் அடையாளம் -L .முருகன் பேட்டி ஆட்சி நேர்மையாகவும், நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியதுதான் ...

மக்களவை தலைவருக்கு மோடி பாராட் ...

மக்களவை தலைவருக்கு மோடி பாராட்டு அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...