கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி

விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் அரசாக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நெல்லியில், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியின் 17-வது தவணையை விடுவிக்கும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் (ஸ்பிரேயர்), நேரடி நெல் விதைப்பு இயந்திரங்கள், தேனி வளர்ப்பு பெட்டிகள் ஆகிய வற்றையும் அமைச்சர் எல் முருகன் வழங்கினார். மேலும் விவசாய துணை விரிவாக்க பெண் பணியாளர்களுக்கான (வேளாண் தோழி) சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகள் அமைத்திருந்த இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின்பு நடைபெறும் முதல் நிகழ்ச்சி விவசாயிகளின் மேம்பாட்டுக்கானது என்றார். இன்று பிரதமர் விடுவித்துள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, நாட்டிலுள்ள 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை நேரடியாக சென்றடையும்  என்றும், இந்த நிதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அவர்கள் விவசாய இடுபொருட்களுக்காக கடன் வாங்குவதை குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார். மத்திய அரசு நாட்டில் உள்ள நான்கு பிரிவினர் குறிப்பாக மகளிர், விவசாயிகள், இளைஞர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தரம் உயர்த்தி விற்பதன் மூலம் அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் மூலம் நாட்டில் மூன்று லட்சம் பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக பயிற்சியளித்து விவசாய பணிகளில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை இயக்குபவர்களாக உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். மேலும் நியாயவிலை கடைகளில் சிறு தானியங்களை விற்க தகுந்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் சிறுதானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சி பாஸ்கர பாண்டியன்,  திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி வி சுரேஷ், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் எஸ் ரமேஷ் மற்றும் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய் நீஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...