கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி

விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் அரசாக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நெல்லியில், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியின் 17-வது தவணையை விடுவிக்கும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் (ஸ்பிரேயர்), நேரடி நெல் விதைப்பு இயந்திரங்கள், தேனி வளர்ப்பு பெட்டிகள் ஆகிய வற்றையும் அமைச்சர் எல் முருகன் வழங்கினார். மேலும் விவசாய துணை விரிவாக்க பெண் பணியாளர்களுக்கான (வேளாண் தோழி) சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகள் அமைத்திருந்த இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின்பு நடைபெறும் முதல் நிகழ்ச்சி விவசாயிகளின் மேம்பாட்டுக்கானது என்றார். இன்று பிரதமர் விடுவித்துள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, நாட்டிலுள்ள 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை நேரடியாக சென்றடையும்  என்றும், இந்த நிதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அவர்கள் விவசாய இடுபொருட்களுக்காக கடன் வாங்குவதை குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார். மத்திய அரசு நாட்டில் உள்ள நான்கு பிரிவினர் குறிப்பாக மகளிர், விவசாயிகள், இளைஞர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தரம் உயர்த்தி விற்பதன் மூலம் அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் மூலம் நாட்டில் மூன்று லட்சம் பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக பயிற்சியளித்து விவசாய பணிகளில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை இயக்குபவர்களாக உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். மேலும் நியாயவிலை கடைகளில் சிறு தானியங்களை விற்க தகுந்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் சிறுதானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சி பாஸ்கர பாண்டியன்,  திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி வி சுரேஷ், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் எஸ் ரமேஷ் மற்றும் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய் நீஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...