இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு

இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, எண்ணெய் பனை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.  மத்திய வேளாண், உழவர் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மலேசியா நாட்டின் தோட்டப்பயிர்கள் துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியை சந்தித்த போது, இது குறித்து விவாதிக்கப்பட்டது.

2024 ஜூலை 16 முதல் 19 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய அமைச்சர், புதுதில்லியில் உள்ள க்ரிஷி பவனில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை இன்று (18.07.2024) சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வேளாண்துறை ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சமையல் எண்ணெய் – எண்ணெய் பனை உற்பத்திக்கான தேசிய இயக்கத்தில் ஒத்துழைப்பை மேற்கொள்ள, இருதரப்பும் விருப்பம் தெரிவித்ததுடன், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களுக்கான சந்தை அணுகுதலில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், வேளாண் துறை ஒத்துழைப்பை, அமைப்பு ரீதியாக்குவது குறித்தும், தோட்டக்கலைத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மலேசிய அமைச்சர் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நன்றி தெரிவித்த மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண்மை மற்றும் பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர விருப்பம் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி ...

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்� ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான� ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ள� ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் ''இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது'' என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப� ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...