கொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னணி

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காலத்திலும்  பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும், உதவிதேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா உதவி அளித்திருப்பது குறித்து குடியரசு துணைத் தலைவர்  வெங்கய்ய நாயுடு இன்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

சென்னையில் நடந்த உலக விவகாரங்களுக்கான இந்தியகவுன்சிலின் (ICWA) 19வது நிர்வாகக்குழு கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றினார். அதன் தலைவர் என்ற வகையில் தொடக்க உரையாற்றியவர், பெருந்தொற்றை சமாளிக்க உலக அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது . “தடுப்புமருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம், சீக்கிரம் நல்லசெய்தி கிடைக்கும்”.

இந்தியாவின் சாமானியமக்களின் வாழ்க்கையில் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது, இந்த பெருந்தொற்று காலத்தில் பலமாக தெரிய வந்திருக்கிறது

வெளிநாடுகளில் வாழ்ந்த மற்றும் வேலைபார்த்து வந்த இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான வந்தேபாரத் திட்டம் பற்றி  நாயுடு குறிப்பிட்டார். அந்தப் பெரும் பணிகளை திறமையாகக் கையாண்ட துறையினர் மற்றும் ஏஜென்சிகளுக்கு அவர் பாராட்டுதெரிவித்தார்.

இதுபோன்ற மக்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை ஐ.சி.டபிள்யூ.ஏ. அமைப்பு அதிகமாக மேற்கொண்டு, இது வரையில் சேவைகள் கிடைக்காத மக்களை சென்றடைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஏறத்தாழ எந்த நாடுமே கோவிட்-19 பாதிப்பில் தப்பவில்லை என்று கூறியவர், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை வெவ்வேறுவகைகளில் அது பாதித்துள்ளது என்று குறிப்பிட்டார். நாடுகளில் உள்ள மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான விஷயங்களை வெளிக்கொண்டு வருவதாக இந்தப் பெருந்தொற்று காலம் அமைந்துவிட்டது என்றார் அவர். “பெரும்பாலானவர்கள் கூட்டு ஒத்துழைப்பு எண்ணத்தை வெளிப்படுத்திய நிலையில், சிலர் குறுகிய மனப் பான்மை காரணமாக பின்வாங்கி விட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்று காரணமாக பிராந்திய மற்றும் உலகளவில் ஏற்பட்டதாக்கம் குறித்த, சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்த ஆய்வில் இந்தக்கவுன்சில் கவனம் செலுத்துவதாக கூறியவர், “கடந்த எட்டுமாதங்களில் ஏற்பட்ட, நினைவில் கொள்ள வேண்டிய இந்த மாற்றங்கள் கவுன்சிலின் ஆராய்ச்சி பணிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது” என்று கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் வசதிகளை இந்தஅமைப்பு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, 50 ஆன்லைன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேசளவிலான கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தியது, வெளிநாட்டு அமைப்புகளுடன் கலந்தாடல் கூட்டங்கள் நடத்தியது, பிராந்திய மற்றும் உலகளவிலான கூட்டங்களில் பங்கேற்றது, இந்தியாவுக்கும் உலக அளவிலான பங்களிப்பாளர்களுக்கும் இடையில் மெய்நிகர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவற்றை குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான முக்கியமான சிந்தனை மன்றங்களில் ஒன்றாக தன்னுடைய இடத்தை ஐ.சி.டபிள்யூ.ஏ. பலப்படுத்திக் கொள்ள இது உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆப்பிரிக்கா குறித்த தேசிய ஆலோசனைகளின்போது தாம் கூறிய பரிந்துரைகளின்படி, ஆப்பிரிக்க நாடுகளைச்சேர்ந்த கொள்கை உருவாக்குநர்கள் மற்றும் அறிஞர்களுடன் காணொலி மூலம் 2 நாள் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்தது குறித்து அவர் திருப்திதெரிவித்தார்.

தனது செயல்பாடுகள் மூலம் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ஐ.சி.டபிள்யூ.ஏ.-வுக்கு பாராட்டு தெரிவித்தவர், கவுன்சிலுக்கு வழிகாட்டுதல்கள் அளித்தமைக்காக வெளியுறவு அமைச்சகத்துக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...