மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது

அகமதாபாத்தில் சர்வதேச நிதி சேவைமைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சர்வதேச நிதிநிர்வாகத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திகழ்ந்தன. தற்போது அந்தவரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. அத்துடன் மிகஅதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும்திகழ்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு உலகளவில் மிகப் பெரும் தேக்க நிலை உருவானது. அப்போது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் இந்தியாவின் பொருளாதார சூழலும் பாதிப்புக் குள்ளானது.

அந்தசமயத்தில் குஜராத் மாநிலம் நிதித் துறையில் மிக முக்கியமான முடிவை மேற்கொண்டது. அப்போது உருவான சிந்தனையின் வெளிப்பாடு இன்று வளர்ச்சியடைந்து ஐஎப்எஸ்சிஏ இங்குஉருவாகும் நிலை எட்டப்பட்டுள்ளது.

21-ம் நூற்றாண்டில் நிதி மற்றும் தொழில்நுட்பம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் அது அறிவியிலும், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரும் ஒன்றிணைந்தது. இதில் இந்தியாவுக்கு மிகுந்தஅனுபவம் உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் அளவுக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் ஒருபகுதியாக இங்குள்ள கிப்ட் சிட்டியில் முதலாவது சர்வதேச தங்கபரிவர்த்தனை மையத்தை (ஐஐபிஎக்ஸ்) பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் 130 கோடி மக்களும் நவீன பொருளாதாரத்துடன் இணைந்துள்ளனர். அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டுவருகிறது.

பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் பாலமாகவும், சர்வதேச வாய்ப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தளமாகவும் கிப்ட்சிட்டி விளங்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாமட்டுமே தரமான பொருட்களையும் சிறப்பான சேவையையும் அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.

கிப்ட்சிட்டி என்பது குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் என்பதன் சுருக்கமாகும். நிதி சார்ந்த பொருள்கள், நிதி சேவை மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த சர்வதேச நிதிசேவை மையத்தில் (ஐஎப்எஸ்சி) செயல்படும். ஐஐபிஎக்ஸ் என்பது தங்க வர்த்தக மையமாகும். சர்வதேச அளவில் தங்க வர்த்தகத்தில் ஈடுபட இந்த மையம் உதவும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...