மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது

அகமதாபாத்தில் சர்வதேச நிதி சேவைமைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சர்வதேச நிதிநிர்வாகத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திகழ்ந்தன. தற்போது அந்தவரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. அத்துடன் மிகஅதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும்திகழ்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு உலகளவில் மிகப் பெரும் தேக்க நிலை உருவானது. அப்போது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் இந்தியாவின் பொருளாதார சூழலும் பாதிப்புக் குள்ளானது.

அந்தசமயத்தில் குஜராத் மாநிலம் நிதித் துறையில் மிக முக்கியமான முடிவை மேற்கொண்டது. அப்போது உருவான சிந்தனையின் வெளிப்பாடு இன்று வளர்ச்சியடைந்து ஐஎப்எஸ்சிஏ இங்குஉருவாகும் நிலை எட்டப்பட்டுள்ளது.

21-ம் நூற்றாண்டில் நிதி மற்றும் தொழில்நுட்பம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் அது அறிவியிலும், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரும் ஒன்றிணைந்தது. இதில் இந்தியாவுக்கு மிகுந்தஅனுபவம் உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் அளவுக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் ஒருபகுதியாக இங்குள்ள கிப்ட் சிட்டியில் முதலாவது சர்வதேச தங்கபரிவர்த்தனை மையத்தை (ஐஐபிஎக்ஸ்) பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் 130 கோடி மக்களும் நவீன பொருளாதாரத்துடன் இணைந்துள்ளனர். அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டுவருகிறது.

பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் பாலமாகவும், சர்வதேச வாய்ப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தளமாகவும் கிப்ட்சிட்டி விளங்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாமட்டுமே தரமான பொருட்களையும் சிறப்பான சேவையையும் அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.

கிப்ட்சிட்டி என்பது குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் என்பதன் சுருக்கமாகும். நிதி சார்ந்த பொருள்கள், நிதி சேவை மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த சர்வதேச நிதிசேவை மையத்தில் (ஐஎப்எஸ்சி) செயல்படும். ஐஐபிஎக்ஸ் என்பது தங்க வர்த்தக மையமாகும். சர்வதேச அளவில் தங்க வர்த்தகத்தில் ஈடுபட இந்த மையம் உதவும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...