மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உறுதிசெய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி ஐ.நா. சபை அண்மையில் ஓர்அறிக்கை வெளியிட்டது. அதில், கரோனாகால கட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வை உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்” என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா. சபையின் கருத்துருவின் படி மாற்றுத் திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் மன உறுதி, வலியை தாங்கும் மனோதிடம் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |