பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்குவோம் – பிரதமர் மோடி

“பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2008 முதல் மத்திய அரசு சார்பில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தைகளின் தினத்தையொட்டி பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகள் சாதனை புரிவதன் வாயிலாக, இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

அவர்களின் சாதனைகள், நம் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளன.

கல்வி, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக, பெண் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...