பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்குவோம் – பிரதமர் மோடி

“பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2008 முதல் மத்திய அரசு சார்பில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தைகளின் தினத்தையொட்டி பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகள் சாதனை புரிவதன் வாயிலாக, இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

அவர்களின் சாதனைகள், நம் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளன.

கல்வி, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக, பெண் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...