மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும்

மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும் என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இரவு வரை, டெல்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று நாங்கள் விவசாயிகளுக்கு உறுதியாக கூறியுள்ளோம், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதைசந்தேகிப்பது ஆதாரமற்றது. இன்னும்கூட, சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசு தயாராக உள்ளது.

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும், அரசுபரிசீலிக்கும் என்று நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். விவசாயிகளின் தலைவர்களிடமிருந்து இந்தபிரச்சினைக்கு பரிந்துரைகள் கிடைத்தால் தீர்வுகாண்பது எங்களுக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் பரிந்துரைகள் தரவில்லை.

கோவிட் மற்றும் குளிரான வானிலையை கருத்தில்கொண்டு, வயதானவர்களையும் குழந்தைகளையும், போராட்ட களத்திலிருந்து, வீட்டிற்கு திருப்பிஅனுப்புமாறு விவசாய தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதமர் மோடியின் தலைமையில், பலவிவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையைகூட அதிகரித்துள்ளோம்.

மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும். போராட்டத்தில் கட்டுக்கோப்பை பேணியதற்காக விவசாயிகள் சங்கங்களுக்கு நான் நன்றிகூற விரும்புகிறேன். இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 9ம் தேதிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...