விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
பல்லடம் அருகேயுள்ள கோடங்கி பாளையத்தில் உழவா் உழைப்பாளா் கட்சித் தலைமை அலுவலகமான உழவாலயத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவா் செல்லமுத்துவை, பாஜக மாநில தலைவா் அண்ணாமலை திங்கள்கிழமை சந்தித்துபேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: உழவாலய கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சியினா் விரும்புகின்றனா். விவசாயிகளின் விருப்பத்தை பிரதமா் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்.
அதேபோல, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற துணை நிற்பேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ஆனைமலையாறு – நல்லாறுதிட்டம் செயல்படுத்த வேண்டும். மின் மோட்டாருக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலை நிா்ணயத்தல், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு, விளைபொருள்களை பாதுகாக்க கிடங்குகள், பருத்தி ஏற்றுமதி, சின்னவெங்காய ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலையிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |