ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 21 மாவட்ட ஊராட்சிகளில் 11 இடங்களில் பாஜக முன்னிலைவகிக்கிறது. காங்கிரஸுக்கு 5 மாவட்ட ஊராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கடந்த நவம்பர் 23, நவ.27, டிசம்பர் 1, டிச.5 என 4 கட்டங்களாக ராஜஸ்தானில் ஜில்லாபரிஷத், பஞ்சாயத் சமிதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 4,371 பஞ்சாயத்து சமிதி, 636 ஜில்லா சமிதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவரும் நிலையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

4371 வார்டுகளில் 1835 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 1718 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. சுயேட்சைகள் 413 இடங்களில் வென்றுள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ், ஜில்லாபரிஷத் தேர்தலில் கிராமப்புற வாக்காளர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் எங்கள்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

இந்தவெற்றி கிராமப்புற மக்கள், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பிரதமர் மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம்” என பதிவிட்டுள்ளார்.

இந்த உள்ளாட்சித்தேர்தல் முடிவு முன்னாள் பாஜக தலைவர் ஹனுமான் பேனிவாலின் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுத்தந்ததுள்ளது.

பாஜக கூட்டணிக் கட்சியான இக்கட்சி 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நகாவூர் பகுதியில் ஹனுமன் பேனிவால் கிங்மேக்கர் என அறியப்படுபவர்.

உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, பகுஜன் சமாஜ்கட்சி 3, தேசியவாத கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...