ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 21 மாவட்ட ஊராட்சிகளில் 11 இடங்களில் பாஜக முன்னிலைவகிக்கிறது. காங்கிரஸுக்கு 5 மாவட்ட ஊராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கடந்த நவம்பர் 23, நவ.27, டிசம்பர் 1, டிச.5 என 4 கட்டங்களாக ராஜஸ்தானில் ஜில்லாபரிஷத், பஞ்சாயத் சமிதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 4,371 பஞ்சாயத்து சமிதி, 636 ஜில்லா சமிதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவரும் நிலையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

4371 வார்டுகளில் 1835 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 1718 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. சுயேட்சைகள் 413 இடங்களில் வென்றுள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ், ஜில்லாபரிஷத் தேர்தலில் கிராமப்புற வாக்காளர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் எங்கள்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

இந்தவெற்றி கிராமப்புற மக்கள், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பிரதமர் மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம்” என பதிவிட்டுள்ளார்.

இந்த உள்ளாட்சித்தேர்தல் முடிவு முன்னாள் பாஜக தலைவர் ஹனுமான் பேனிவாலின் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுத்தந்ததுள்ளது.

பாஜக கூட்டணிக் கட்சியான இக்கட்சி 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நகாவூர் பகுதியில் ஹனுமன் பேனிவால் கிங்மேக்கர் என அறியப்படுபவர்.

உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, பகுஜன் சமாஜ்கட்சி 3, தேசியவாத கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...