விவசாயிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வலியைப் போக்க பா.ஜ.க உழைத்திருக்கிறது

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க-வின் ‘நமோ கேதுத் பஞ்சாயத்து’ திட்டத்தை ஜேபி.நட்டா தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசியவர், “பிரதமர் மோடி மட்டுமே சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளார். விவசாயிகளைப் பற்றி யாரும் சிந்திக்க வில்லை. ஆனால் பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதியோஜனா திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை கொண்டுவந்தார்.

அனைத்து தலைவர்களும் விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்காக எந்தநன்மையும் செய்யவில்லை. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கி பணியாற்றியவர்கள் யாராவது இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அது பிரதமர் நரேந்திரமோடி ஜி தான். விவசாயிகள் பெயரில் அரசியல் செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வலியைப் போக்க பா.ஜ.க உழைத்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...