குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க-வின் ‘நமோ கேதுத் பஞ்சாயத்து’ திட்டத்தை ஜேபி.நட்டா தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசியவர், “பிரதமர் மோடி மட்டுமே சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளார். விவசாயிகளைப் பற்றி யாரும் சிந்திக்க வில்லை. ஆனால் பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதியோஜனா திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை கொண்டுவந்தார்.
அனைத்து தலைவர்களும் விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்காக எந்தநன்மையும் செய்யவில்லை. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கி பணியாற்றியவர்கள் யாராவது இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அது பிரதமர் நரேந்திரமோடி ஜி தான். விவசாயிகள் பெயரில் அரசியல் செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வலியைப் போக்க பா.ஜ.க உழைத்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |