உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்கு தயாராகிறது

இந்தியத் தொழில்வர்த்தக கூட்டமைப்பான அசோச்சேம் (ASSOCHAM) இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவ படுத்தும் வர்த்தகச் சங்கங்களால் 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தஅமைப்பு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மேலும், சமூக சிக்கல்களுக்கும் தனியார் அல்லது தனிநபர் முன்முயற்சிகளுக்கும் இடையில் ஒருபாலமாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பின் குறிக்கோள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதும், வர்த்தக தடைகளை குறைப்பதும், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உகந்தசூழலை வளர்ப்பதும் ஆகும்.

400 சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளைத் தன்னகத்தேகொண்ட அசோச்சேம் கூட்டமைப்பு, நாடு முழுவதுமுள்ள 4.5 லட்சம் உறுப்பினர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் 100 ஆண்டுகள் நிறைவுவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ‘அசோச்சேம் அறக்கட்டளை வாரம் 2020’ நிகழ்வு நேற்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், `இந்தியாவின் விரிதிறன்: 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய ஆத்மநிர்பர் பயணம்.’

அசோச்சேம் அறக்கட்டளை வாரத்தையொட்டி நேற்று சிறப்புமாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ‘அசோச்சேம் நிறுவனத்தின் இந்தநூற்றாண்டின் சிறந்த நிறுவனம்’ எனும் விருதை டாடா குழுமத்தின் சார்பாக ரத்தன் டாடாவுக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது, “உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்குத் தயாராகி வருகிறது. இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய நாம் தயாராகி, அதற்கேற்பச் செயல்படவேண்டும். கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தைத் திறம்பட கையாண்டது.

உலகநாடுகள் இந்தியப் பொருளாதாரத்தை நம்புகின்றன. கொரோனா காலத்தில், உலக நாடுகள் பலதடைகளைச் சந்தித்தபோதும், இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்தது. நமதுநாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால் இல்லை. அதை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம். அடுத்த 27 ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய நிலையை தீர்மானிக்கும் என்பதால், திட்டமிட்டுச் செயல்பட மற்றும் தேசத்தை கட்டியெழுப்ப கவனம்செலுத்த வேண்டிய நேரம் இது.

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்தத் துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்யவேண்டும். `ஏன் இந்தியாவில்’ என்ற நிலையிலிருந்து ‘இந்தியாவில் ஏன் இருக்கக் கூடாது’ என்ற நிலையை நோக்கி நாம் நகரவேண்டும்.

இந்தியாவின் நூற்றாண்டுகால வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. நாட்டின் பலமுக்கிய வளர்ச்சிகளில் டாடா நிறுவனத்தின் பெரும் பங்கு இருந்துள்ளது” என்று மோடி பாராட்டினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...