உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்கு தயாராகிறது

இந்தியத் தொழில்வர்த்தக கூட்டமைப்பான அசோச்சேம் (ASSOCHAM) இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவ படுத்தும் வர்த்தகச் சங்கங்களால் 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தஅமைப்பு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மேலும், சமூக சிக்கல்களுக்கும் தனியார் அல்லது தனிநபர் முன்முயற்சிகளுக்கும் இடையில் ஒருபாலமாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பின் குறிக்கோள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதும், வர்த்தக தடைகளை குறைப்பதும், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உகந்தசூழலை வளர்ப்பதும் ஆகும்.

400 சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளைத் தன்னகத்தேகொண்ட அசோச்சேம் கூட்டமைப்பு, நாடு முழுவதுமுள்ள 4.5 லட்சம் உறுப்பினர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் 100 ஆண்டுகள் நிறைவுவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ‘அசோச்சேம் அறக்கட்டளை வாரம் 2020’ நிகழ்வு நேற்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், `இந்தியாவின் விரிதிறன்: 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய ஆத்மநிர்பர் பயணம்.’

அசோச்சேம் அறக்கட்டளை வாரத்தையொட்டி நேற்று சிறப்புமாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ‘அசோச்சேம் நிறுவனத்தின் இந்தநூற்றாண்டின் சிறந்த நிறுவனம்’ எனும் விருதை டாடா குழுமத்தின் சார்பாக ரத்தன் டாடாவுக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது, “உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்குத் தயாராகி வருகிறது. இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய நாம் தயாராகி, அதற்கேற்பச் செயல்படவேண்டும். கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தைத் திறம்பட கையாண்டது.

உலகநாடுகள் இந்தியப் பொருளாதாரத்தை நம்புகின்றன. கொரோனா காலத்தில், உலக நாடுகள் பலதடைகளைச் சந்தித்தபோதும், இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்தது. நமதுநாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால் இல்லை. அதை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம். அடுத்த 27 ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய நிலையை தீர்மானிக்கும் என்பதால், திட்டமிட்டுச் செயல்பட மற்றும் தேசத்தை கட்டியெழுப்ப கவனம்செலுத்த வேண்டிய நேரம் இது.

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்தத் துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்யவேண்டும். `ஏன் இந்தியாவில்’ என்ற நிலையிலிருந்து ‘இந்தியாவில் ஏன் இருக்கக் கூடாது’ என்ற நிலையை நோக்கி நாம் நகரவேண்டும்.

இந்தியாவின் நூற்றாண்டுகால வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. நாட்டின் பலமுக்கிய வளர்ச்சிகளில் டாடா நிறுவனத்தின் பெரும் பங்கு இருந்துள்ளது” என்று மோடி பாராட்டினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...