இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம்

‘பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது,’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடந்த தனியார் ‘டிவி’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில், சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில், மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் 3வது முறையாக, ஆட்சி அமைத்து, 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. ரூ.9லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.

15 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நிய செலவாணி 700 பில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளது. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, முதலீடு குறித்து உலகம் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பார்த்து உலகம் வியக்கிறது.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்கள், வேலையின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியா வேகமாக வளர்ந்து வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவின் பொருளாதாரம் , 1 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.,யை எட்ட 63 ஆண்டு ஆனது. ஆனால் 2 டிரில்லியன் டாலரை எட்டுவதற்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆனது. 2020ம் ஆண்டில் 3 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. உலகின் 11வது பொருளாதாரமாக இருந்த இந்தியா, பத்தாண்டுகளில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...