நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது

உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கிவைத்தார்.

உ.பி.,யில், மேற்கு சரக்கு ரயில் தடச்சேவை திட்டத்தின் கீழ், 5,750 கோடி ரூபாய் செலவில், குர்ஜா – பாவ்புர் இடையே, சரக்குரயில் போக்குவரத்திற்காக, 351 கி.மீ., துாரத்திற்கு பிரத்யேக ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த, பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் நகரில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு சரக்குரயில் தடச் சேவை கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்துவைத்து, சரக்கு ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கடந்த, 2006ல் முந்தைய அரசு, மேற்குசரக்கு ரயில் தடச் சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால், திட்டம் ஆவண வடிவிலேயே இருந்தது. கடந்த, 2014 வரை, 1 கி.மீ., ரயில்பாதை கூட போடப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியும் சரிவர செலவிடபடவில்லை. மத்தியில், 2014ல் பா.ஜ., அரசு அமைந்த பின், நானேநேரடியாக, இத்திட்டத்தில் கவனம்செலுத்தி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், அடுத்த சிலமாதங்களில், 1,100 கி.மீ., ரயில் தட சாலைப் பணிகள் முடிவடைய உள்ளன.

முந்தைய ஆட்சியில், தேர்தல் ஆதாயத்திற்காக, ஏராளமான ரயில்கள் அறிவிக்கபட்டன. ஆனால் அதற்குதேவையான முதலீடு இல்லாததால், செயல்பாட்டிற்கு வரவில்லை. ரயில்வே துறையை நவீனமயமாக்க, கடந்த ஆட்சியில் அக்கறைகாட்டவில்லை. குறைந்தவேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆளில்லா கடவுப்பாதைகள் ஆபத்துப் பகுதிகளாக இருந்தன. இத்தகைய மோசமான பணிச்சூழலை, நாங்கள் ஆட்சிக்கு வந்தஉடன் மாற்றிக்காட்டினோம். ரயில்வே பட்ஜெட் முறை ஒழிக்கப்பட்டது.

ரயில் தடங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில்போக்குவரத்து நவீன மயமாக்கப்பட்டது. நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் தற்போது கண்கூடாக தெரிகின்றன. இந்தபுதிய சரக்கு ரயில் தடச்சேவை, ‘தற்சார்பு பாரதம்’ என்ற, கர்ஜனையுடன் இன்று துவங்கியுள்ளது. இதனால், உ.பி.,யில், ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...