நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது

உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கிவைத்தார்.

உ.பி.,யில், மேற்கு சரக்கு ரயில் தடச்சேவை திட்டத்தின் கீழ், 5,750 கோடி ரூபாய் செலவில், குர்ஜா – பாவ்புர் இடையே, சரக்குரயில் போக்குவரத்திற்காக, 351 கி.மீ., துாரத்திற்கு பிரத்யேக ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த, பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் நகரில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு சரக்குரயில் தடச் சேவை கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்துவைத்து, சரக்கு ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கடந்த, 2006ல் முந்தைய அரசு, மேற்குசரக்கு ரயில் தடச் சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால், திட்டம் ஆவண வடிவிலேயே இருந்தது. கடந்த, 2014 வரை, 1 கி.மீ., ரயில்பாதை கூட போடப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியும் சரிவர செலவிடபடவில்லை. மத்தியில், 2014ல் பா.ஜ., அரசு அமைந்த பின், நானேநேரடியாக, இத்திட்டத்தில் கவனம்செலுத்தி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், அடுத்த சிலமாதங்களில், 1,100 கி.மீ., ரயில் தட சாலைப் பணிகள் முடிவடைய உள்ளன.

முந்தைய ஆட்சியில், தேர்தல் ஆதாயத்திற்காக, ஏராளமான ரயில்கள் அறிவிக்கபட்டன. ஆனால் அதற்குதேவையான முதலீடு இல்லாததால், செயல்பாட்டிற்கு வரவில்லை. ரயில்வே துறையை நவீனமயமாக்க, கடந்த ஆட்சியில் அக்கறைகாட்டவில்லை. குறைந்தவேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆளில்லா கடவுப்பாதைகள் ஆபத்துப் பகுதிகளாக இருந்தன. இத்தகைய மோசமான பணிச்சூழலை, நாங்கள் ஆட்சிக்கு வந்தஉடன் மாற்றிக்காட்டினோம். ரயில்வே பட்ஜெட் முறை ஒழிக்கப்பட்டது.

ரயில் தடங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில்போக்குவரத்து நவீன மயமாக்கப்பட்டது. நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் தற்போது கண்கூடாக தெரிகின்றன. இந்தபுதிய சரக்கு ரயில் தடச்சேவை, ‘தற்சார்பு பாரதம்’ என்ற, கர்ஜனையுடன் இன்று துவங்கியுள்ளது. இதனால், உ.பி.,யில், ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...