சட்டசபை தேர்தலில் திமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்போம் என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., சார்பில் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்ற அணிபிரிவு மாநாட்டில் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடத்திலும் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றுவருகின்றன. வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அரியணையில் அமர்த்த பா.ஜ., மிகப் பெரிய அளவில் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. அதிகளவிலான பா.ஜ., வேட்பாளர்கள் சட்டசபை உறுப்பினராக வெற்றிபெறுவார்கள்.
ஸ்டாலின் போன்ற எதிர்க் கட்சியினர் பா.ஜ.,வின் வெற்றிவேல் யாத்திரையை குறை கூறினார்கள். வேல் எடுத்து அரசியல் செய்கிறார் என கிண்டல் செய்தனர். ஆனால் இன்று தை கிருத்திகை நாளில் பாஜக ., எங்கு வேல் எடுத்ததோ அதே இடத்தில் கையில் வேல் எடுக்கவைத்துள்ளார் முருக கடவுள். கோவிலுக்கு போகமாட்டோம் என சொன்னவர்களிடம் ஒரேமாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம். திமுக.,வை வரும் இந்த சட்டசபை தேர்தலில் அரசியலைவிட்டே விரட்டியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |