தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் விதிமீறல் எதுவும் நிகழவில்லை

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் தனிநபா் தகவல்கள் பாதுகாப்பில் விதிமீறல் எதுவும் நிகழவில்லை என நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே செவ்வாய்க் கிழமை அளித்தபதில்:

கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை அறிவித்தாா். அந்த திட்டத்தின் படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் டிஜிட்டல் சுகாதார அட்டை இலவசமாக வழங்கப்படும். அந்த அட்டையில், சம்பந்தப்பட்ட நபரின் சுகாதாரவிவரங்கள் டிஜிட்டல் வடிவில் இடம் பெற்றிருக்கும்.

இந்ததிட்டம், சோதனை முறையில் அந்தமான்-நிகோபாா் தீவுகள், சண்டீகா், தத்ரா-நகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 21-ஆம் தேதிவரை, 6,30,478 சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அட்டைகளில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள், தனி சேமிப்பகங்களில் பாதுகாக்கப்படும்.மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நேரங்களில், சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலுடன் மட்டுமே தேசியசுகாதார அட்டைகளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளப்படும். இதில், தனிநபா் தகவல் பாதுகாப்பில் விதிமீறல் எதுவும் நிகழவில்லை.

கரோனா தடுப்பூசி திட்டம், கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, முன்கள பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தபடுகிறது.

நாடு முழுவதும் மத்திய அரசு, மாநிலஅரசு மற்றும் தனியாா் துறையில் பணியாற்றும் 92.6 லட்சம் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக உதவியாளா்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்க பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் 5,32,605 போ், கேரளத்தில் 4,07,016 போ், தில்லியில் 2,78,343 போ், ஆந்திரத்தில் 4,38,990 போ், கா்நாடகத்தில் 7,73,362 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் .

தடுப்பூசியால் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை:கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு புகாா் எதுவும் வரவில்லை .

அவசர பயன்பாட்டுக்காக, கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதால் தலைவலி, குளிா், காய்ச்சல், மயக்கம், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கம் அல்லது தோல் சிவப்படைதல் போன்ற பொதுவானபிரச்னைகளே ஏற்பட்டன. கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு இதுவரை புகாா் எதுவும் வரவில்லை.

2019-ஆம் ஆண்டின் புதியமருந்து பரிசோதனை விதிகளின்படி, ஒருமருந்தை பயன்படுத்தும்போது ஏதேனும் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், மருந்து தயாரிப்பு நிறுவனமே அதற்கு முழுபொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...