மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து இணைய கருத்தரங்கு நடைபெற்றது. இந்தகல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான இணைய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது:-நமது இளம்தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். எனவே இன்றைய இளம்தலைமுறையை மேம்படுத்துவது என்பது இந்தியாவின் எதிர் காலத்தை மேம்படுத்துவதாகும்.2022 யூனியன் பட்ஜெட்டில் கல்வித் துறை தொடர்பான 5 விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
*முதலாவதாக, தரமான கல்வியை உலகமயமாக்கல்,
*இரண்டாவது, திறன்மேம்பாடு,
*மூன்றாவது, நகர்ப்புறதிட்டமிடல் மற்றும் வடிவமைப்பு
*நான்காவது, சர்வதேசமயமாக்கல்- இந்தியாவில் உலகத்தரம்வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உருவாக்குதல்
*ஐந்தாவது, விஷுவல் அனிமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள்(ஏ வி ஜி சி)
தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த இந்த பட்ஜெட் உதவும். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது ஒருமுன்னோடி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், கல்விபயில மாணவர்களுக்கு எண்ணற்ற இடங்கள் இருக்கும். இதனால் பல்கலைக்கழகங்களில் இருக்கை பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
விரைவில் டிஜிட்டல் (யூ என் ஐ) பரிவர்த்தனை தொடங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து பங்குதாரர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |