இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு நான்கு முனைகளில் செயல்படுகிறது

இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரேநேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத் துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம்முழுவதும் உயரப்போகிறது என்றும் மோடி தெரிவித்தார்.

சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட் செயல்படுத்தல் குறித்த காணொளியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றின்போது இந்தியாவின் சுகாதாரத்துறை காட்டிய வலிமையை உலகம் குறிப்பிட்டுள்ளது, கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத் துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில், இந்திய மருத்துவர்கள் மற்றும் துணைமருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம் முழுவதும் உயரப்போகிறது,இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரேநேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. நோயைத் தடுப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார அணுகல், சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களின் தரம் மற்றும் அளவு அதிகரித்தல் ஆகியவையே அந்த நான்குமுனை ஆகும்.

சுகாதார துறைக்கு இப்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மிகவும் தனித்துவமானது. இந்தத்துறை மீதான அரசின் உறுதிப்பாட்டைக இதுகாட்டுகிறது. மேட் இன் இந்தியா தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு நாடுதயாராக இருக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து காசநோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். முகமூடிகளை அணிவது, ஆரம்பகாலத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே காசநோயை தடுப்பதில் முக்கியம் ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...