2-வது சுகாதார உச்சி மாநாட்டில் ஜிதேந்திர சிங் உரை

புதுதில்லி ஹோட்டல் தாஜ் நகரில் நடைபெற்ற அமெரிக்க இந்திய வர்த்தக சபையின் (ஏஎம்சிஏஎம்) இரண்டாவது சுகாதார உச்சி மாநாட்டில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்  ஜிதேந்திர சிங் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார பராமரிப்பு சேவைகள் கிடைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“புதுமையான, எளிதில் அணுகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை விரைவுபடுத்துதல்: தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம்” என்ற இந்த உச்சிமாநாட்டின் மையக்கருத்தை அமைச்சர் பாராட்டினார். இந்தியாவில் அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

சுகாதார சேவைகளில் அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள்,  தொழில்துறைப் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்த வகையான உச்சிமாநாடுகள் முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என்றும் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

தொற்று நோய்கள் ஒழிப்பு, தொற்றா நோய்களைக் குறைத்தல், சுகாதார குறியீடுகளை உருவாக்குதல், நிலையான முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தான்  அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.  செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்றவற்றால் சுகாதார சேவைகளில் நமது திறன்களை கணிசமாக மேம்படுத்த முடியும் அவர் குறிப்பிட்டார்.

பொது சுகாதாரம் என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல எனவும் தனியார் பங்களிப்பு இதில் சமமாக முக்கியமானது என்றும் அமைச்சர்  ஜிதேந்திர சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...