மருத்துவ சாதனங்களின் ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்து ஜே.பி .நட்டா ஆய்வு

மருந்துகள் ஒழுங்குமுறையில் இந்தியா உலகளாவிய முன்னணி நாடாக மாறுவதற்கு, நமது செயல்பாடுகள் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார். மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் முறைப்படுத்தப்படுத்துதலை ஆய்வு செய்வது குறித்த கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் (டிசிஜிஐ) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மருந்துகளை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜே. பி. நட்டா, மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ தனது நடவடிக்கைகளின் மூலம் உலகத் தரத்தை அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரே மாதிரியான தன்மை, தொழில்நுட்ப மேம்பாடு, எதிர்கால அணுகுமுறை, மிக உயர்ந்த தரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மேம்பாடு தேவை என்று அவர் கூறினார்.

மருந்துகள், மருத்துவ சாதனங்கள் தொழில்துறையினரின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம் என்று மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். “ஒழுங்குமுறை தேவைகளுக்கு உட்பட்டு மருந்து தொழில்துறைக்கு எளிதாக வணிகம் செய்வதை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று ஜேபி நட்டா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...