தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் சசிகலா, தினகரனும் இணையவேண்டும் என்று கூறினார்.

நேற்று தமிழக சமூக நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் அவர் கூறியதாவது:

மத்திய அரசின், ‘ஜன் தன்’ திட்டத்தில், இதுவரை, 41.79 கோடி வங்கி கணக்கு துவக்கப்பட்டு, ஒருலட்சத்து, 37 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 1.11 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, 2,865 கோடி ரூபாய் வங்கியில் உள்ளது. இதேபோல, இலவச காஸ் வழங்கும் திட்டத்தில், எட்டு கோடிக்கும் அதிகமான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி நடத்துகிறது. தமிழகசட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைக்கிறது. இந்த கூட்டணி வெற்றிபெறும்; முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கனவு நிச்சயம் நிறைவேறும். தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதிமுக.,வுடன் சசிகலா, தினகரன் இணைய வேண்டும்.

விவசாயிகளின் வருவாயை உயர்த்தவே, மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் போராட்டத்தை, உடனடியாக கைவிடவேண்டும். தேவைக்கேற்ப இந்த சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, ஆலோசனை நடத்த முன்வர வேண்டும். இந்த ஆண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...