ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி

“தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார். தமிழகத்திற்கு, 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது,” என, மதுரையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை தரிசனம் செய்த பின், அவர் அளித்த பேட்டி: ஐந்து முறை ஆட்சி செய்த அ.தி.மு.க.,வுடன், அண்ணாமலை கூறியதால் தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த பார்லிமென்ட் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை குறிவைத்து அ.தி.மு.க., போட்டியிட்டது. ஆனால், அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. சிறுபான்மையின ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவில்லை.

அதேநேரம், சொன்ன வாக்குறுதிகள் எதையும் செய்யாததால், ஓட்டளித்த தி.மு.க., மீது சிறுபான்மையின மக்கள் கோபத்தில் உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தால் மக்கள் கோபம் அவருக்கும் புரியும்; தெரியும்.

வரும் தேர்தலிலும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை. தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஹிந்து சமய அறநிலையத் துறையை அகற்றுவோம்.

எங்களது இந்தக் கருத்துக்கு எத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று தெரியவில்லை.

தே.ஜ., கூட்டணியுடன் கொள்கை ரீதியில் இணையும் கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது தொடர்பாக, கடந்த தேர்தலின் போது 36 பக்க வெள்ள அறிக்கை வெளியிட்டோம்.

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 36,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதில், தமிழகத்திற்கு பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படும்.

தங்கள் ஆட்சியின் லட்சணத்தை மறைப்பதற்காக மத்திய அரசு மீது குறை சொல்வதை மட்டுமே முழுநேர வேலையாக, தி.மு.க., அரசு செய்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால், தமிழகத்தில் எந்த மாற்றமும் நடந்து விடப்போவதில்லை. பிரதமர் மோடி தமிழகம் வரும் போது முதல்வர் ஸ்டாலின் போட்டி போட்டு சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தி.மு.க., அரசு, கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது. கவர்னர் குறித்து தி.மு.க.,வினர் அவதுாறாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

தேசிய கட்சித் தலைவர் ஒருவர், தங்களோடு கூட்டணி சேருமாறு நடிகர் விஜயை சமீபத்தில் அழைத்தார்.

தமிழகத்தில் காணாமல் போகும் நிலையில் இருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம், இன்று விஜயை தங்களுக்கு துணையாக அழைத்துக் கொண்டிருக்கின்றன.

விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை, தயவு செய்து 10 சதவீதமாவது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது என் கடமை. விஜயை, வருந்தி வருந்தி கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் தான், அக்கட்சி உள்ளது; பரிதாபம்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...