காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பாஜக முன்னாள்தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:

2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.35.71 என இருந்த பெட்ரோல்விலை, அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல், காங்கிரஸ் ஆட்சிமுடிந்து, பாஜக அரசு பொறுப்பேற்றபோது ரூ.74.71 ஆக உயர்ந்து இருந்தது.

தற்போது பாஜக ஆட்சியில், கடந்த 7 ஆண்டுகளில் ரூ.18 உயர்ந்து லிட்டருக்கு ரூ.92-க்கு விற்பனையாகிறது. ஆனால், காங்கிரஸ்ஆட்சியில் 10 ஆண்டுகளில் லிட்டருக்கு ரூ.39 உயர்ந்திருந்தது.

அதேபோல, 2004-ல் காங்கிரஸ் கட்சியில் ரூ.266 ஆக இருந்த காஸ்சிலிண்டர் விலை, 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல் ரூ.920 ஆக உயர்ந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.140 விலை குறைந்து ரூ.780-க்கு விற்கப்படுகிறது. உற்பத்திவிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், காஸ் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயம் உள்ளது.

அப்போது இருந்ததைவிட இப்போது காஸ்சிலிண்டர் விலை குறைவுதான். விலை உயர்வு என இப்படி மு.க.ஸ்டாலின் பொய் பேசிவருவதால் அவரை புழுகுமூட்டை என மக்கள் நினைக்கிறார்கள்.

எனவே மக்கள் திமுக- காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்கவேண்டும். காங்கிரஸ் கட்சியின் பாவத்தின் சுமை தாங்காமல்தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்துள்ளது என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...