எங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக… சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடி… Read more at: https://tamil.asianetnews.com/india/kerala-orthodox-syrian-church-urged

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாட்பகுதியில் உள்ளது செயிண்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் சர்ச். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சர்ச் கி.பி.1050ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனிடையே தேவாலயம் உள்ள சாலையை தேசியநெடுஞ்சாலை ஆணையம் விரிவாக்கம் செய்துவந்தது. விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள தேவாலயத்தை இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த அப்பகுதி மக்கள் பழங்கால தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேவலாயத்தை இடிக்கும் உத்தரவை தடைசெய்ய வேண்டுமென, கேரளாவை ஆளும் இடது சாரி கட்சிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் சர்ச் நிர்வாகம் கோரிக்கைவைத்தது. ஆனால் இந்த பிரச்சனையை அறிந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் ஆர்.பாலசங்கர், எவ்வித பிரச்சனையும் இன்று சுமூக உடன்பாட்டை பெற்றுத்தந்துள்ளார். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்ரியை நேரில் சந்தித்து, பிரச்சனையின் தீவிரத்தை விவரமாக விளக்கிக்கூறியுள்ளார். இதையடுத்து மத்திய தொல்லியல் துறையினர் தேவாலயத்தில் ஆய்வுமேற்கொண்டு, அது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சான்று கொடுத்தனர்.

எனவே 1000 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை இடிக்கும்முடிவு கைவிடப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் தங்களை கைவிட்டநிலையில், களத்தில் இறங்கி கேட்காமலேயே உதவிய பாலசங்கருக்குதான் எங்களுடைய ஓட்டு என சர்ச் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து தேவாலய செய்திதொடர்பாளர் ஜான்ஸ் ஆப்ரஹாம் கோனட் தெரிவித்திருப்பதாவது, “தேவாலயத்தில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவரோவியங்களும், 19ம் நூற்றாண்டில் தேவாலய தலைவராக இருந்த மலங்கரா மெட்ரோ பாலிட்டன் பிலிப்போஸ் மர் டயனிசியஸ் உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த தேவாலயத்தை காக்க யாரிடம் எல்லாமோ உதவிகோரினோம். ஆனால் பாஜக தலைவர் பாலசங்கர் எங்களுக்கு தானாகவே முன்வந்து பிரச்சனையை தீர்த்து வைத்தார். அவர் வரும்தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று அறிந்தோம். அப்படி அவர் போட்டியிட்டால் அவருக்கு கிறிஸ்துவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அப்படி செய்யா விட்டால் நாம் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...