பா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

பா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கிறார்கள்? 2014 ல் பாஜக ஆட்சிக்கு வரும்முன்னர், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைதான் இருந்தது. மதிய உணவு திட்டம். இதில் பொய்யான கணக்கு கொடுத்து கையாடல் செய்யப் பட்டது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யாமல் பொய்பெயர் பட்டியல் சேர்த்து கொள்ளை போடப்பட்டது. சமையல் எரிவாயு ஒரு வீட்டுக்கு 5 இணைப்புவரை பெற்று, அதிக விலையில் வெளியில் விற்கப்பட்டது.

NGO என்ற பெயரில், இந்தியாவில் இருக்கும் ஏழைமக்களுக்கு உதவுவதாக பணம் பெற்று, அதை மதமாற்று வியாபாரத்துக்கும் சுய லாபத்துக்கும் பயன் படுத்தப் பட்டது.இதைவிட பெரிய கொள்ளை என்ன என்றால், அரசியல் வாதிகள் பொது வாழ்வில் கொள்ளைபோடும் கறுப்பு பணத்தை, வெள்ளை பணம் ஆக்குவதற்கு, போலியாக நிறுவனங்கள் தொடங்கி, அவற்றில் லாபம்பெற்றதாக கணக்கு காட்டி வந்தார்கள். போலி ஆசிரியர்கள், போலி ரேசன் அட்டைகள், ஏராளம்.

வரிகட்டாமல் வியாபாரம். முன்பெல்லாம் தங்க ஆபரணங்கள் வாங்கவேண்டும் என்றால் பில் இல்லாமல் வாங்க இடிந்தது. அந்தமுறைகேடு எல்லா பொருள் விற்பனையிலும் இருந்துவந்தது. GST மூலம் அது ஒழித்து கட்டப்பட்டது. அதனால் வியாபாரிகளுக்கு கோபம்.

பாஸ்போட்டு , விசாஇல்லாமல் இந்தியாவுக்குள் வேலிதாண்டி வந்தவர்களை கண்டறியும் முயற்சியில் CAA கொண்டு வரப்பட்டது, காஷ்மீ்ர் தனி அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது, முத்தலாக் முறை முடிவுக்கு கொண்டுவந்தது இவை எல்லாம் இஸ்லாமியருக்கு பிடிக்கவில்லை.

இவை எல்லாம் இந்தியாவின் பொருளாதாரத்தை, பெண் உரிமையை, பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்கள் ஆகும். இந்த முறைகேடுகளை ஒழித்து கட்டும் முயற்சியில் மோடி அரசு ஓரளவு வெற்றிகண்டுள்ளது.

அண்டை நாட்டு உதவியுடன் நடந்துவந்த தீவிரவாத செயல்கள் 99% வரை ஒடுக்கப்பட்டு உள்ளது. வடக்கு எல்லையில் ஆக்கிரமிப்புகள் முறியடிக்கப்பட்டது.
அதிவேக சாலைகள், அதிவேக ரயில்கள், நவீன துறை முகங்கள், உள்நாட்டு தயாரிப்புகள் (make in India), இலவச வீடுகள், சுத்தமான இந்தியா திட்டத்தில் எங்கும் கழிவறைகள், இலவச சமையல் எரிவாயு, விவசாய உதவி (6000)இவை மோடி அரசின் சிலகுறிப்பிட தக்க சாதனைகள்.இன்னும் செய்ய வேண்டியது ஏராளம்.

இப்போது இவை அனைத்தையும் விட்டுவிட்டு விலைவாசி ஏற்றம் என்று மக்களை தூண்டி விடுகிறார்கள். சம்பளம் ஏறலாம் விலை ஏறகூடாது என்பது எந்த பொருளாதார மேதையின் கண்டுபிடிப்பு? கொத்தனார் கூலி ரூ 500 இருந்தபோது பெட்ரோல் விலை ரூ 70. இப்போ கொத்தனார் கூலி ஆயிரம். இரண்டுமடங்கு. பெட்ரோல் விலை 2 மடங்கு விற்க வில்லை. இது போல்தான் சமயல் எரி வாயு விலையும். அறிவு பூர்வமாக சிந்தித்து பார்த்தால் புரியும்.இந்தியா வளர்ச்சி பாதையில் தொடர்ந்துபயணிக்க வேண்டும் என்றால், ஊழல் கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...