திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பா.ஜ.,வில் இணைந்தார்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணனுக்கு வரும்சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் படாததால், அதிருப்தி அடைந்தவர் இன்று (மார்ச் 14) பா.ஜ.,வில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ., டாக்டர் சரணவன், அக்கட்சியின் மருத்துவ அணியின் மாநிலநிர்வாகியாக இருந்தார். இவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார். நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலுக்கு திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால், மதுரைமாவட்ட திமுக., கோஷ்டிபூசல் காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதியை, அக்கட்சி விரும்பி கேட்காமலேயே, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதியும் தளபதிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்திஅடைந்த டாக்டர் சரணவனின் ஆதரவாளர்கள், தி.மு.க.,வில் இனி நீடிக்கவேண்டாம்; நம்ப வைத்து கழுத்தை அறுத்த கட்சியான திமுக.,வை விட்டு விலகி சுயேச்சையாக போட்டியிடுவோம் என, வலியுறுத்தினர்.

இதனையடுத்து டாக்டர் சரவணன், தனக்கு பா.ஜ., மேலிடத்தில் உள்ள நெருக்கமான நண்பர்கள் வாயிலாக, இன்று அக்கட்சியின் மாநிலதலைவர் முருகன் தலைமையில் பா.ஜ., வில் இணைந்தார். அவர் பா.ஜ., தலைமை அலுவலகம் சென்று பா.ஜ., மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...